தமிழக அரசின் சார்பில் சென்னை இலக்கியத் திருவிழா ஜனவரி 6 முதல் 8 வரை நடைபெறுகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தினுள் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் ஐந்து மையங்களில் இது போன்ற இலக்கியத் திருவிழா நடைபெறவுள்ளது. முதல் நிகழ்வு திருநெல்வேலியில் துவங்கியது. சென்னையில் நடைபெறுவது இரண்டாவது இலக்கியத் திருவிழா.
தமிழ் இலக்கியத்தைக் கொண்டாடும் தமிழக அரசின் இந்த ஏற்பாடு மிகுந்த பாராட்டிற்குரியது.
சென்னை இலக்கியத் திருவிழாவில் ஜனவரி 6 மதியம் 12 மணிக்கு சென்னையும் நானும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.
Published on January 01, 2023 07:56