ஏ.பெரியதம்பிப் பிள்ளை -ஆசிரியர்களும் மாணவர்களும்

வரலாற்றை தோண்டும்போது எப்போதுமே சுவாரசியமான கதைகள் அகப்படும். அதிலொன்று ஏ.பெரியதம்பிப் பிள்ளையின் வாழ்க்கை.

சுவாமி விபுலானந்தரின் மாணவராக இருந்த ஏ.பெரியதம்பிப் பிள்ளை மதம் மாறி தீவிர கிறிஸ்தவராகவும் போதகராகவும் ஆனார். போதகர் பயிற்சிக்காக மதுரை பசுமலைக்கு வந்தார். மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் சுவாமி விபுலானந்தரைச் சந்திக்கும் அவர் அந்த உரையாடலுக்குப்பின் மீண்டும் இந்துவானார்.

ஏ.பெரியதம்பிப் பிள்ளையின் மாணவர் ஈழத்து பூராடனார் என்னும் க.தாவீது செல்வராசகோபால். ஈழத்து பூராடனார் அதிதீவிர கிறித்தவர். ஏசு புரணம் என்னும் காவியத்தை எழுதியவர். அவர் சொந்தச் செலவில் ஏ.பெரியதம்பிப் பிள்ளைக்கு ஈழத்தில் சிலை வைத்தார். பூராடனார் விபுலானந்தர் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்

விபுலானந்தரை ஏ.பெரியதம்பிப் பிள்ளை சந்தித்தார். செல்வராசகோபால் மதுரையில் இருந்து இந்துவாக மீண்டும் மாறி திரும்பிவந்த ஏ.பெரியதம்பிப் பிள்ளையை சந்தித்தார். இரு சந்திப்புகளை யாராவது கதையாக்கலாம்.

ஏ.பெரியதம்பிப் பிள்ளை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2022 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.