சிலசமயம் நாம் அறிவியக்கத்தின் மையமாக எண்ணுபவர்களைக் கொண்டே சிந்தனைப்போக்குகளை வரையறை செய்துவிடுவோம். பல தளங்களில் அவற்றைக் கொண்டுசென்றவர்கள் வரலாற்றில் மறக்கப்படுவார்கள். தமிழியக்க ஆளுமைகளில் ஒருவரான மணி திருநாவுக்கரசு நூலாசிரியர், பேச்சாளர், ஆய்வாளர் என்றெல்லாம் சொல்லத்தக்கவரல்ல. ஆனால் தனித்தமிழ் பாடநூல்களை உருவாக்கி நிலைநிறுத்திய பெரும்பணி அவருக்குரியது. தமிழ்க்கல்வியில், தமிழ் மீட்பில் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு
மணி திருநாவுக்கரசு
Published on December 21, 2022 10:34