மமங் தாய்- கடிதங்கள்

மமங் தாய் தமிழ் விக்கி மமங் தாய், அருணாச்சல் கதைகள் மமங் தாய் கவிதைகள்

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கலந்துகொள்ளும் மமங் தாய் அவர்களின் கவிதைகளை வாசித்தேன். அவர் பற்றிய தமிழ்விக்கி பதிவையும் வாசித்தேன். உண்மையில் தமிழ்விக்கியில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல் பழங்குடிகளின் மறந்துபோன வாழ்வையும் அவர்களின் எதிர்காலம் பற்றிய பதற்றத்தையும் அவர் கவிதைகளில் வாசிக்கமுடிந்தது. அந்தப் பழங்குடிகள் கற்களையும் பாறைகளையும் சகோதரர்களாக அறிந்தவர்கள். தனிமையிலிருந்தும் அதிசயங்களிலிருந்தும் வந்திறங்கியவர்கள். எந்த ஆவணமும் இல்லாமல் நதியையே நரம்பாகக் கொண்டவர்கள். ஆனால் அனைத்தும் மாறிக்கொண்டிருக்கின்றன. சிறுநகரங்கள் எதிர்காலத் தலைமுறைக்காக வளர்ந்துகொண்டிருக்கின்றன. அவை மரணத்தை நினைவூட்டுகின்றன. அவர்கள் சாதாரணம் என்று எண்ணியிருந்த சாலையோரப் பச்சைப் பெரணிச் செடிகளும் ஏன் சடங்குகளும் தெய்வங்களும் கூட மறைந்துவருகின்றன. ஊழைத்தேடும் பயணிகளாக ஆகிவிட்டார்கள்.

ஐம்பதாண்டுகளின் நிகழ்ந்த மாற்றத்தை ஒரேமூச்சில் வாசிக்கமுடிந்தது. இன்னும் என்னென்ன நிகழப்போகின்றன என்ற பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. நல்ல கவிஞர் ஒருவரைத் தமிழிலக்கியத்திற்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.

அன்புடன்,

த.திருமூலநாதன்.

***

அன்புள்ள ஜெ

ஒவ்வொரு ஆண்டும் ஓர் இந்திய இலக்கிய நட்சத்திரம் தமிழில் அறிமுகமாகிறார். அசலான ஒரு படைப்புக்கலைஞர். இந்த ஆண்டு அறிமுகமாகும் மமங் தாய் அவர்களின் படைப்புகளில் உள்ள அசலான குரல் ஆச்சரியப்பட வைக்கிறது. பழங்குடி மக்களின் கதைகளில் இயல்பான ஒரு கள்ளமற்ற, கட்டற்ற கனவு இருக்கும். அதை ஒரு நவீன மனம் புரிந்துகொள்ளவோ அதனுடன் இணையவோ முடியாது. அந்த இணைவு சாத்தியமான அபூர்வமான படைப்புகள் அவருடையவை.

இதேபோல உலக இலக்கியவாதிகளையும் விஷ்ணுபுரம் மேடையில் அறிமுகம் செய்யவேண்டும்.

ஆர்.ரவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.