சிலர் வரலாற்றில் இருந்து முழுமையாகவே மறைந்துவிடுகிறார்கள். அவர்களில் ஒருவர் நா.ரகுநாதன். ரசிகன் என்ற பெயரில் எழுதியவர். அவருடைய ஒரு புகைப்படம்கூட இல்லை. ஆனால் இலக்கிய ஆசிரியனுக்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. கொஞ்சமேனும் வாசிக்கத்தக்க எதையாவது எழுதியிருந்தால் எப்படியோ மீண்டு வந்து நிலைகொள்வார்கள். ரசிகனும் மீண்டு வந்தார். தமிழினி அவர் கதைகளை வெளியிட்டுள்ளது.
ரசிகன்
Published on December 07, 2022 10:32