சியமந்தகம் தொகைநூல் வாங்க
அன்புள்ள ஜெ
சியமந்தகம் தொகுப்பை அண்மையில் ஒரு நண்பரிடமிருந்து வாங்கி வாசித்தேன். நான் அது ஒரு வழக்கமான மணிவிழா மலர் என்றுதான் நினைத்தேன். வழக்கமாக அதில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்தான் இருக்கும். ஆனால் சியமந்தகம் ஓர் அரிய இலக்கியத் தொகுப்பு. இலக்கியவாதிகளின் நினைவுகள், முக்கியமான இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் ஆகியவை அடங்கியது.
குறிப்பாக இளம் எழுத்தாளர்களான சுரேஷ் பிரதீப் போன்றவர்களின் விமர்சன ஆய்வுகள் மிகக் காத்திரமானவையாக இருந்தன. எல்லா கோணங்களிலும் உங்களைப் புரிந்துகொள்ள உதவும் நூல் என்று சந்தேகமில்லாமல் சொல்லமுடியும்.
மாணிக்கவேல் ஆறுமுகம்
*
அன்புள்ள ஜெ.
சியமந்தகம் தொகுப்பில் அருண்மொழி நங்கை, அஜிதன் இருவரும் உங்களைப் பற்றி எழுதிய நெகிழ்வான நினைவுகளை வாசித்தேன். மிக அற்புதமானவை. ஒரு குடும்பத்தில் இருந்து அக்குடும்பத் தலைவர் பற்றி இப்படி ஒரு சித்திரம் உருவாவது என்பது மிக அரிதானது. அருண்மொழி கட்டுரை உணர்ச்சிபூர்வமானது. அஜிதன் கட்டுரை ஆழமான தத்துவ விவாதமும் கொண்டது.
ஜெ. பென்னி
Published on December 06, 2022 10:31