ராஜம் கிருஷ்ணனின் மறைவு தமிழ்ச்சூழல் பற்றிய ஒரு திகைப்பூட்டும் புரிதலை அளிப்பது. உறவினர்களால் அவர் முழுமையாகவே ஏமாற்றப்பட்டார். அவருடைய செல்வத்தால் படித்தவர்கள், வளர்ந்தவர்கள் அவர்கள். அவரை கொண்டுசென்று ஒரு குடிசைப்பகுதியில் கைவிட்டுவிட்டுச் சென்றனர் எனப்படுகிறது. திலகவதி போன்ற சிலரின் உதவியால் அவருடைய இறுதிக்காலம் கௌரவமாக கழிந்தது.
அண்மையில் ஒரு வழக்கு. தன் தந்தையின் சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு அவரை கைவிட்ட ஒரு ஆஸ்திரேலிய குடிமகனை நீதிமன்றம் கண்டித்து சொத்துக்களை திரும்ப அளிக்க ஆணையிட்டது. இது நடந்துகொண்டே இருக்கிறது
ராஜம் கிருஷ்ணன் தமிழ் விக்கி
Published on December 04, 2022 10:34