காந்திய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பெயர்களில் ஒன்று அரங்க.சீனிவாசன். மரபுக்கவிதையில் காந்தியின் வரலாற்றை எழுதியவர். இந்த நூல், பால காண்டம், தகுதிக் காண்டம், அறப்போர்க் காண்டம், அரசியற் காண்டம், விடுதலைக் காண்டம் என ஐந்து காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுபத்தேழு படலங்களையும் 5000-க்கும் மேற்பட்ட பாடல்களையும் கொண்டது. சமகாலக் காவியங்களில் பாடநூல்களில் இடம்பெறுவதனால் புலவர் குழந்தையின் ராவண காவியம் அறியப்பட்டதாக உள்ளது. சுத்தானந்த பாரதியின் பாரதசக்தி காவியம், அரங்க சீனிவாசனின் காந்தி காதை ஆகியவை முக்கியமானவை.
அரங்க சீனிவாசன்
Published on November 26, 2022 10:34