முப்பது வயதுக்குக் குறைவான எவராவது புஷ்பா தங்கத்துரை (ஸ்ரீவேணுகோபாலன்) நாவல்களை வாசித்திருக்கிறார்களா என ஆர்வத்துடன் கேட்பது என் வழக்கம். பெரும்பாலான வணிகக்கேளிக்கை எழுத்தாளர்களையும்போல அவரும் அப்படியே மறைந்துவிட்டார். அவருக்கு முந்தைய யுகத்து வணிகக்கேளிக்கை எழுத்துக்களை எழுதியவர்கள் தேசபக்தி, இலட்சியவாதம் என கொஞ்சம் தொட்டுக்கொண்டு இன்னமும் நீடிக்கிறார்கள். ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் அவர் எழுதிய திருவரங்கன் உலாவுக்கு தமிழிலக்கியத்தில் முக்கியமான இடம் உண்டு.
ஸ்ரீவேணுகோபாலன்
ஸ்ரீவேணுகோபாலன் – தமிழ் விக்கி
Published on October 27, 2022 11:34