[image error]
இருபதாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்வு. ஓர் எழுத்தாளர் எல்லா எழுத்தாளரையும் அவருக்கு நன்றாக தெரியும் என்பதுபோல எழுதுவார் (இன்று அவர் இல்லை) அவருடைய தோளில் தலைசாய்த்து நான் கதறி அழுததாக ஒருமுறை எழுதினார். வல்லிக்கண்ணன் பாராட்டுவிழாவில் நான் ”டேய் போலி எழுத்தாளர்களே!” என ஆணவமாகப் பேசியதாக எழுதினார்.
நான் வல்லிக்கண்ணனை நேரில் பார்த்ததே இல்லை. அதை நான் அவருக்கு எழுதினேன். அவர் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றார். நாலைந்து பேர் உடனே ”அதானே, ஆதாரம் இல்லாமல் எழுதுவாரா?” என்றனர். ஆனால் ஆதாரங்களை கேட்கவில்லை.
கொஞ்சநாள் கழித்து இன்னொரு இடத்தில் நான் வல்லிக்கண்ணனை மேடையில் அவமதித்தேன், அவர் தலையில் அடித்துக்கொண்டார் என அவரே மீண்டும் எழுதினார். மீண்டும் நான் வல்லிக்கண்ணனை சந்தித்ததே இல்லை என எழுதினேன். ஆதாரம் இருக்கிறது என்று அவர் சொன்னார். அதானே, ஆதாரம் இல்லாம இருக்குமா என்றனர் சிலர்.
வல்லிக்கண்ணனை நினைக்கும்போதெல்லாம் புன்னகை வருவது இந்த நிகழ்வால்தான்.
வல்லிக்கண்ணன்
வல்லிக்கண்ணன் – தமிழ் விக்கி
Published on October 03, 2022 11:34