கோவி.மணிசேகரன் எனும் மர்மம்

1992ல் கோவி மணிசேகரனுக்கு லில்லி தேவசிகாமணி விருது வழங்கப்பட்டது. அன்று முப்பது வயதான இளம்படைப்பாளியாகிய எனக்கும் அவ்விருது வழங்கப்பட்டது. கோவி மணிசேகரனுடன் என்னை சமானமாக வைத்ததை ஏற்கமுடியாது என நான் அவ்விருதை மறுத்துவிட்டேன். அது அன்று ஒரு விவாதமாக ஆகியது. சுபமங்களா இதழில் குறிப்புகள் வெளிவந்தன.

1980ல் கோவி மணிசேகரன் தன் யாகசாலை என்னும் நாவலை சினிமாவாக எடுக்க முயன்றார். அம்முயற்சி பாதியிலேயே நின்றுவிட பெரும் பண இழப்புக்கு ஆளாகி எம்.ஜி.ஆரிடம் சென்று கண்ணீர்விட்டார். மனமிரங்கிய எம்ஜிஆர் அவருக்கு தமிழக அரசின் ஆகப்பெரிய இலக்கிய விருதான ராஜராஜன் விருதை 1984ல் வழங்கினார். எம்ஜிஆரின் இரக்கமனதுக்கு உதாரணமாக இது சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் விருதுகள் இப்படித்தானா அளிக்கப்படவேண்டும்?

ராஜராஜன் விருது கோவிக்கு சாகித்ய அக்காதமி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுத்தந்தது. 1992ல் அவருக்குச் சாகித்ய அக்காதமி விருது குற்றாலக் குறிஞ்சி என்னும் நாவலுக்காக கிடைத்தபோது இலக்கிய உலகில் கடுமையான கண்டனங்கள் உருவாயின.

வேடிக்கையான மனிதர். ஜெயகாந்தன் போலவே நடையுடை பாவனைகளை மேற்கொண்டவர். ஆனால் அவர் எழுதியவை பெரும்பாலும் பாலியல் கதைகள். பாலியல்கதைகளையே அடுக்குமொழியில் வரலாற்றுநாவல்களாகவும் எழுதினார். அன்றும் இன்றும் அவருக்கு அனேகமாக வாசகர்களே இல்லை. அவரை விரும்பிவாசித்த ஒருவரைக்கூட நான் கண்டதில்லை. ஆனால் எப்படி புகழ்பெற்ற வணிக எழுத்தாளராக இருந்தார்?

கோவி.மணிசேகரன் கோவி. மணிசேகரன் கோவி. மணிசேகரன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2022 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.