விஷ்ணுபுரம் விருது ஒரு கவனிக்க வேண்டிய ஆளுமையை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறது. ஆனால் சாரு கவனிக்கப்படாத ஆளுமை கிடையாது. அவரது வாசகப் பரப்பும் பெரியது. ஆனால், அவர் முழுமையாக கவனிக்கப் படவில்லை என்பதும் உண்மை. அவர் மீதான உதாசீனம் என்றும் இருந்தபடியே இருக்கும். சாஹித்ய அகாடமி உள்ளிட்ட வேறு அங்கீகாரம் அவரது எழுத்துகளுக்கு வாய்ப்பில்லை என்றும் தனக்கு விருது என ஒன்று கிடைத்தால் அது விஷ்ணுபுரம் விருதாகத்தான் இருக்கும் என்றும் முன்பு சாரு கூட பதிவிட்டிருந்தார். அதுதான் இப்போது நிகழ்ந்தும் இருக்கிறது.
காளிபிரசாத்- விஷ்ணுபுரம் விருது 2022
Published on September 06, 2022 11:34