[image error]
இரா.மீனாட்சி என்ற பெயரை நான் முதலில் எழுத்து கவிதைகளில் கண்டேன். தமிழின் தொடக்ககாலக் கவிஞர்களில் ஒரு பெண்குரல் என்பது வியப்பாக இருந்தது. ஆனால் சுந்தர ராமசாமி அவர் தொடர்ந்து எழுதாமல் விலகிச் சென்றுவிட்டதாகச் சொன்னார். நீண்ட இடைவேளைக்குப் பின் சுஜாதா அவரைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியபோதுதான் இரா.மீனாட்சி தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பதை அறிந்தேன். ஆரோவில்லில் ஆசிரியராக, ஆரோவில் அமைப்பாளராக உலகைச் சுற்றுபவராக அவர் மீண்டும் அறிமுகமானார். ஆனால் கவிதைகள் கல்லூரி ஆசிரியைகள் வழக்கமாக எழுதுவனவாக ஆகிவிட்டிருந்தன. இன்று தமிழ்க்கவிதையில் இரா.மீனாட்சிக்கு இடமேதும் இருப்பதாக விமர்சகனாக நான் எண்ணவில்லை.
இரா.மீனாட்சி
Published on September 05, 2022 11:34