நீலகேசி தமிழின் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. நீலகேசியின் கதை வேறு வடிவில் சைவமரபிலும் உள்ளது. ஆனால் கேரளத்திலும் குமரி மாவட்டத்திலும் நீலகேசி ஒரு நாட்டார் தெய்வம். அது மெல்ல பத்ரகாளியும் ஆகியிருக்கிறது. சமணத்திற்கும் இந்த நாட்டார் மரபுக்குமான ஊடாட்டம் இப்பதிவுடனும், இதனுடன் இணைந்த பதிவுகளுடனும் ஒரு வலைபோல் விரிகிறது. கொஞ்சம் கற்பனை கொண்டவர் ஒரு நாவலாகவே விரித்துக்கொள்ள முடியும். நம் பண்பாட்டின் பரிணாமத்தையே உணர முடியும்
நீலகேசி
Published on September 03, 2022 11:34