[image error]
லக்ஷ்மி நாவல்களை வாசிக்காத பெண்களை அக்காலத்தில் காண்பதே அரிதாக இருந்தது. தொடர்கதைத் தொகுதிகளாக அவர் நாவல்கள் திண்ணைகள் தோறும் கிடந்தன. ஆனால் அந்தவகையான எழுத்தாளர்களில் அவரே நல்லூழ் கொண்டவர். அவர் சாகித்ய அக்காதமி விருதுவரை சென்றார். வாசந்தி, சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன், விமலா ரமணி, ரமணி சந்திரன் என எவருக்கும் கிடைக்காதது.
அதற்குக் காரணம் லக்ஷ்மி மரபு மீறவில்லை. ‘அடக்கமான எழுத்து’ என அவர் அன்று கொண்டாடப்பட்டார். மற்ற பெண் எழுத்தாளர்கள் எழுதச்சாத்தியமான ’அடக்கத்தின்’ எல்லை வரைச் சென்று கொஞ்சம் மீறி திரும்பி வந்தவர்கள். அந்த மீறலே கலையாகவும், விடுதலையாகவும் ஆகிறது என்றாலும் லக்ஷ்மியின் மீறலின்மையே அவரை வெற்றிகரமானவராக ஆக்கியது.
லக்ஷ்மி
லக்ஷ்மி – தமிழ் விக்கி
Published on September 02, 2022 11:34