ராபர்ட் போல்ட்
டேவிட் லீன் பற்றிய ஆவணப்படம் ஒன்றில் அவர் தனது படங்களின் திரைக்கதை ஆசிரியர் ராபர்ட் போல்ட் பற்றி மிகவும் உயர்வாகக் குறிப்பிடுகிறார். ராபர்ட் போல்ட் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர். டேவிட் லீனின் முக்கியப் படங்கள் யாவும் அவர் எழுதியவை.

ராபர்ட் போல்ட் எழுதித்தருவதில் மிகக் குறைவாகவே மாற்றம் செய்வேன். மற்றபடி அவரது எழுத்துப்பணியில் குறுக்கிட மாட்டேன். திரைக்கு ஏற்ப ஒரு காட்சியை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவரை விடச் சிறப்பாக எவராலும் வசனம் எழுத முடியாது என்கிறார் டேவிட் லீன்.
நாடக ஆசிரியர் என்பதால் போல்ட் தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்கக்கூடியவர். தேர்ந்த வசனங்களை எழுதுபவர். திரைக்கு ஏற்ப நாவலை உருமாற்றுவதில் போல்ட் திறமைசாலி. போரிஸ் பாஸ்டர்நாக்கின் டாக்டர் ஷிவாகோ நாவலையும் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் போல்ட்டின் தனித்திறமையைப் புரிந்து கொள்ள முடியும்.

டாக்டர் ஷிவாகோ நாவலை விடவும் படமே எனக்கு அதிகம் பிடித்திருந்தது. நாவலில் வரும் சில எளிய நிகழ்வுகளைத் திரையில் மகத்தான காட்சிகளாக டேவிட் லீன் உருவாக்கியிருக்கிறார்.
ராபர்ட் போல்ட் இரண்டு முறை சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார்.
சார்லஸ் டிக்கன்ஸ், பாஸ்டர்நாக், லாரன்ஸ், ஈ எம் பாஸ்டர் என்று புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை மையமாகக் கொண்டு படங்களை உருவாக்கிய டேவிட் லீன் மேடம்பவாரி நாவலைத் தழுவி உருவாக்கியதே Ryan’s Daughter. டேவிட் லீன் படங்களில் மிகவும் கவித்துவமானது இப்படம். காதல் காட்சிகளை மிகவும் அழகாக உருவாக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகி ரோசி புத்தகத்தைக் கடலில் தூக்கி வீசி எறிவார். அது தான் அவள் காதலிக்கத் துவங்கியதன் அறிகுறி. காதல் கதைகளின் வழியே தனக்குள் கற்பனையை வளர்த்துக் கொண்ட ரோசி பள்ளி ஆசிரியரைக் காதலிக்கத் துவங்கும் போது அவளது கையிலிருந்த புத்தகம் தேவையற்றதாக்கி விடுகிறது
புத்தகம் நம் கைக்கு வந்தால் தான் மாற்றம் உருவாகும் என்றில்லை. கையை விட்டுப் போனாலும் மாற்றம் ஏற்படும் போலும்.
மேடம்பவாரி நாவலிருந்து இப்படம் மாறுபட்டது. படத்தின் இறுதிக்காட்சியில் ரோசியை ஊரே கூடித் தண்டிக்கிறது. அவர்கள் ஊரைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள். அப்போது ரோசி அவமானத்தால் தலைகுனிந்தபடி நிழல் போல நடக்கிறாள். அந்த நிலையில் அவளது கணவன் உரிமையோடு அவளைக் கைகோர்த்து நடக்கச் சொல்கிறான். மறக்கமுடியாத காட்சியது
ராபர்ட் போல்ட் எழுதிய எ மேன் ஃபார் ஆல் சீசன்ஸ் நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. திரைப்படமும் மிக நன்றாகவே எடுக்கபட்டிருக்கிறது. இதில் தாமஸ் மோர் பேசும் வசனங்கள் அபாரமானவை
“When a man takes an oath, he’s holding his own self in his own hands like water, and if he opens his fingers then, he needn’t hope to find himself again.“
“Some men think the earth is round, others think it flat. It is a matter capable of question. But if it is flat, will the King’s command make it round? And if it is round, will the King’s command flatten it?“
“gentlemen of the jury, there are many kinds of silence. Consider first the silence of a man who is dead. Let us suppose we go into the room where he is laid out, and we listen: what do we hear? Silence. What does it betoken, this silence? Nothing; this is silence pure and simple. But let us take another case. Suppose I were to take a dagger from my sleeve and make to kill the prisoner with it; and my lordships there, instead of crying out for me to stop, maintained their silence. That would betoken! It would betoken a willingness that I should do it, and under the law, they will be guilty with me. So silence can, according to the circumstances, speak! Let us consider now the circumstances of the prisoner’s silence. The oath was put to loyal subjects up and down the country, and they all declared His Grace’s title to be just and good. But when it came to the prisoner, he refused! He calls this silence. Yet is there a man in this court – is there a man in this country! – who does not know Sir Thomas More’s opinion of this title?“
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
