பொன்மாரியப்பன் தூத்துக்குடியிலுள்ள தனது சலூனில் நூலகம் அமைந்து அனைவரின் பாராட்டினையும் பெற்றவர். ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் பொன்மாரியப்பனுடன் உரையாடி நூலகம் நடத்தி வருவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட சிறந்த புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை சலூனில் வைத்திருக்கிறார்.

பொன்மாரியப்பன் எனது தீவிர வாசகர். இவரது சலூனில் எனது இலக்கிய உரைகளைத் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருகிறார்.

தற்போது புத்தக வாசிப்பை வளர்க்கும் விதமாக இலக்கிய வாசகர் திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்த நிகழ்வு அவரது சலூன் முன்பாகவே நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக இப்படி ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. இது ஒரு நல்ல துவக்கம்.


செப்டம்பர் 11 ஞாயிறு மாலை தூத்துக்குடி மில்லர்புரத்திலுள்ள சுசில்குமார் ப்யூட்டி கேரில் இலக்கிய வாசகர் திருவிழா நடைபெறுகிறது
இந்நிகழ்வைத் துவக்கிவைத்து உரையாற்றுகிறேன்.
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
புகைப்படங்கள்
நன்றி : விகடன்
Published on September 01, 2022 00:10