ஓர் எழுத்தாளரை கலைக்களஞ்சியம் அறிமுகம் செய்யும்போது முழுமையாக முன்வைக்கவேண்டும் என்பது ஒரு நெறி. முதன்மைக் கலைக்களஞ்சியங்களில் அவ்வெழுத்தாளர்களின் எழுத்தின் இயல்பு, அவர் முன்வைக்கும் அடிப்படைக் கொள்கைகள் ஆகியவையும் வரையறை செய்யப்பட்டிருக்கும். மாற்றுமெய்மை என்று யுவன் சந்திரசேகர் சொல்வதை வரையறை செய்யாமல் அவரைப் பற்றிய பதிவை முன்வைக்க முடியாது. ஆனால் அவர் வரையறைகளுக்கு எதிரானவர். குறைந்தபட்ச விளக்கம் மட்டுமே அளிக்கவேண்டும் என்னும் கொள்கை கொண்டவர். கலைக்களஞ்சியம் அவரை அவர் படைப்புகளில் இருந்தே தொகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது
யுவன் சந்திரசேகர்
யுவன் சந்திரசேகர் – தமிழ் விக்கி
Published on July 13, 2022 11:34