பதேர் பாஞ்சாலி வாசிப்பு.

ஆர். ச ண்முகசுந்தரம்

பதேர் பாஞ்சாலி 

பதேர் பாஞ்சாலி பதேர் பாஞ்சாலி – தமிழ் விக்கி

விபூதிபூஷண் பந்தோபாத்யாய

[image error] விபூதிபூஷண் பந்தோபாத்யாய – தமிழ் விக்கி

வணக்கம்.. இந்திய நாவல்கள் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது தங்கள் கட்டுரைகள்.. சுரா அவர்கள் இந்திய இலக்கியங்கள் பால் பெரிய கவனம் கொள்ளாமல் இருந்தது.. அவரது கடைசிக் காலங்களில் தங்கள் சிபாரிசின் பேரில் இந்திய இலக்கியங்களை வாசித்தது.. இவை ஆழமான மன நகர்வுகளைத் தருவதாக சுரா கூறியது போன்ற அனுபவங்களை அம்மாதிரி கட்டுரைகளில் பதிந்துள்ளீர்கள்.

இந்திய  இலக்கியங்களை  நான் ஓரளவேனும் வாசிக்க காரணம் தங்கள் கட்டுரைகளும் அவற்றில் இடம் பெற்ற மேற்கண்டவை போன்ற செய்திகளும் எனில் அது மிகையன்று..

இன்று அத்தகைய வகைமைகளில் முக்கியமான படைப்புகளை நானறிவேன் எனில் அதற்கும் தாங்களே அதிகளவு காரணம்.. சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்றவை வெளியிட்டுள்ள முக்கியப் படைப்புகளை பேசும் தங்களின் இணைய கட்டுரை நினைவிற்கு வருகிறது.

வாசிப்பில் உள்ளோரை பதேர் பாஞ்சாலி ஏதோ ஒரு விதத்தில் செய்தியாக வந்து சேர்ந்த வண்ணமாக இருக்கும்.. எனக்கும் இந்நாவல் குறித்த அப்படியான செய்தி சேர்க்கைகள் நிறைய உண்டு..

துர்க்காவும், அப்புவும் தங்களது  துன்பங்களை தங்களைச் சூழ்ந்துள்ள இயற்கையைக் கண்டு அதில் கரைந்து இன்னல்களை கரைத்துக் கொள்கின்றனர் என்ற இந்நாவல் பற்றிய வாசித்த வரி மனதில் நின்று விட்டது.. இதன் பிறகு  பதேர் பாஞ்சாலியை வாசிக்க என்னுள் வேகம் அதிகமானது..

வாசிப்பதற்கு முன் தங்களது, எஸ் ரா வினது என இவ்விரு எழுத்தாளுமைகளின் பதேர் பாஞ்சாலி விமர்சனத்தை வாசித்தேன்.. பிறகு நாவலை வாசித்தேன்.. மீண்டும் அவ்விருவர் விமர்சனங்களை வாசித்தேன்.. தாங்கள் நாவலை உயர்த்த, எஸ் ரா சத்ய ஜித்ரே திரைபடத்தை சிலாகிக்கிறார்.

அப்பு, துர்க்கா இருவர் வழியே எனது பால்யங்களின் அமிழ்ந்து போன அதே நேரம் முக்கியமான எனக்கே எனக்கான அனுபவங்களை மீட்டுக் கொள்ள முடிந்தது.. அவ்வனுபவங்களை நன்கு சிந்திக்க அவை இன்னும் ஆழமாக  என்னை மாற்றுவதை  உணர்ந்தேன்.

நதி , காடு என இயற்கையின் பெரிய படைப்புகளெல்லாம் நாவலில் நிறைவாக வந்து மனதில் நிறைகின்றன.

அந்த வயது முதிர்ந்தவள் , அப்புவின் தந்தை மரணங்களை விட துர்க்காவின் மரணம் தரும் வலி வேறு மாதிரியானது. ஓட்டம், நடையென ஒரு வித துள்ளலோடே இருந்தவள், இல்லாமல் போகிறாள் என்பது மனதில் தரும் பிசைவு  அதிகமானது.

இந்த நாவலின்  சிறுவர்கள் பேசிக் கொள்ளும் பகுதிகள், தஸ்தாவஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை நினைவுபடுத்துகிறது.. கரமசோவிலும் சிறுவர்கள் மட்டுமே வரும் பேசிக் கொள்ளும் பகுதிகள் முக்கியமானவை.

நீண்ட நாள் (ஆண்டுகள்)  எண்ணம் நிறைவேறியது. பதேர் பாஞ்சாலி வாசிப்பை எனது வாசிப்பில் மிக முக்கிய ஒன்றெனவே   எண்ணுகிறேன். …நன்றி.

முத்தரசு

வேதாரண்யம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.