நாமக்கல் கட்டண உரை
நாமக்கல் நகரில் ஒரு கட்டண உரை ஆற்றுகிறேன். நாமக்கல் விஷ்ணுபுரம் நண்பர்கள் முன்னரே அதைக் கோரினர். ஆனால் அப்போது வசதிப்படாமல் உரை திருப்பூரில் நடத்தப்பட்டது.
இதுவரை சென்னை, நெல்லை, கோவை, திருப்பூர் நகர்களில் நடத்தப்பட்ட கட்டண உரைகள் அனைத்துமே பண்பாட்டை வரையறுக்கவும் புரிந்துகொள்ளவும் முயன்றவை. ஓர் ஒட்டுமொத்த, ஒருங்கிணைந்த பார்வையை உருவாக்கும் நோக்கம் கொண்டவை. என்னுடைய பார்வையை சுருக்கமாக ஒருங்கிணைவு நோக்கு என்று சொல்வேன். சமன்வயம் என சம்ஸ்கிருதத்தில். வள்ளலாரின் பார்வை அது என வரையறை செய்யும் ம.பொ.சி அதற்கு ஒருமைப்பாடு என பொருள் அளிக்கிறார். (வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு)
இந்த உரை தத்துவம், ஆன்மிகம் சார்ந்தது. ஆனால் இலக்கியம் என்னும் வழியினூடாக அவற்றை அணுகுவது. கட்டண உரை என்பது அடிப்படையில் ஒரே நோக்கம் கொண்டதுதான். கூர்ந்து கேட்கும் அவையினரை மட்டுமே திரட்டுவது
ஜெ
நாள் 17 ஜூலை 2022 (முன்பதிவு அவசியம்)
இடம் நளா ஓட்டல் திருச்சி சாலை நாமக்கல்
தொடர்புக்கு 9952430125, 9486068416, 9738233431
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

