தமிழ் விக்கி தூரன் விருது -கடிதங்கள்

கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு

அன்புள்ள ஜெயமோகன்

நலம்தானே?

கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கி தூரன் விருது வழங்கப்பட்டிருப்பது சிறப்பு. பெரியசாமித் தூரனுக்கு தமிழ் நாட்டாரியல் -சமூகவியல் ஆய்வாளர் என்னும் வகையிலும் முக்கியமான ஒரு தொடக்க இடம் உண்டு. அவர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டருடன் இணைந்து வாய்மொழி நாட்டார் இலக்கியங்களை பதிப்பித்திருக்கிறார்.

கரசூர் பத்மபாரதி புறக்கணிக்கப்பட்ட ஓர் ஆய்வாளர். அவருடைய நூல்கள் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டாலும் ஓர் ஆய்வாளராக அவர் கல்விப்புலத்தால் இன்னும்கூட எங்கும் மதிக்கப்படவில்லை. அவர் பேராசிரியர் பணியில் இல்லை என்பதே காரணம். கரசூர் பத்மாவதிக்கு அளிக்கப்பட்ட இந்த விருது மிகப்பெரிய மதிப்பு மிக்கது.

தொடரட்டும் உங்கள் பணி

மா.செல்வராசன்

பெரியசாமித் தூரன் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர்

அன்புள்ள ஜெயமோகன்,

கரசூர் பத்மபாரதியின் தமிழ் விக்கி இணையப்பக்கத்துக்குச் சென்று பார்த்தேன். அத்தனை விரிவாக அவரை ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள். இதேபோல காத்திரமான ஆய்வுகளைச் செய்து இன்னமும் கவனிக்கப்படாத பல ஆய்வாளர்கள் உள்ளனர். அவர்களையும் கவனத்திற்குக் கொண்டுவர தமிழ் விக்கி பரிசு அமைப்பினர் முன்வரவேண்டும். சரியான ஆய்வுகள் கவனிக்கப்படுவது ஆய்வுத்துறையில் மறுமலர்ச்சியை உருவாக்கும்

சி.சீரங்கன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2022 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.