மைத்ரி
அஜிதன் எழுதிய முதல் நாவல் ‘மைத்ரி’. மைத்ரி என்பது ஒருங்கிணைவு அல்ல, ஒன்றாதல், ஒன்று மட்டுமே என ஆதல். இது இளமையின் உத்வேகம் நிறைந்த ஒரு காதலின் சித்திரம். நேரடியான எளிய கதையோட்டம் கொண்டது. புறவுலகை இளமைக்கே உரிய கூரிய புலனுணர்வுடன் ஆழ்ந்து உணரும் பரவசம் நிறைந்தது.
கைக்குழந்தைபோல வியப்பில் விரிந்த கண்களுடன், ஒவ்வொரு ஓசையையும் இசையையும் உள்வாங்கும் நுண்ணிய செவிகளுடன், எல்லா மணங்களுக்காகவும் தேடும் நாசியுடன், தென்றலையும் வெயிலையும் மட்டுமில்லாமல் நிழலையும் காற்றசைவையும் தொட்டறியும் உடலுடன் இமையமலை நிலவெளியில் பயணம் செய்கிறான் கதைசொல்லி. உடன் பயணம் செய்பவள் அவனை மேலும் மேலும் இமையத்தின் ஆழத்துக்குள், அதன் அசைவில்லாத காலத்துக்குள் கொண்டுசெல்பவள். அவன் ஒன்றென்றாகும் ஒரு பெருந்தருணத்தைச் சென்றடைகிறான்.
பாவனைகளேதுமற்ற இளமை வெளிப்படும் படைப்பு இது. கள்ளமின்மையின் அழகு கொண்டது. ஆனால் செறிவான படிமங்களின் வழியாக ஆழ்ந்த தத்துவதரிசனத்தையும் முன்வைக்கிறது. காஷ்மீரி சைவம் முதல் பௌத்த மெய்மை வரை அதன் தேடல் நீண்டு சென்று நிறைவை சந்திக்கிறது.
தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றை வெளியிடுவதில் விஷ்ணுபுரம் பதிப்பகம் பெருமிதம் கொள்கிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
(மைத்ரி 11- ஜூன் 2022 ல் சென்னையில் நிகழும் விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருதுவிழாவில் கிடைக்கும்)
மைத்ரி கிண்டில் பதிப்பு வாங்கவிஷ்ணுபுரம் பதிப்பகம்
240 பக்கங்கள். கெட்டி அட்டை. சலுகை விலை ரூ 200
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

