சியமந்தகம், கடிதங்கள்

சியமந்தகம்

அன்புள்ள ஜெ

சியமந்தகம் தளம் தொடர்ச்சியாக அருமையான கட்டுரைகளுடன் வந்து கொண்டிருக்கிறது. தேவதேவனின் கட்டுரையை வாசித்து அவருக்கும் உங்களுக்குமான உறவை அறிந்து மகிழ்ந்தால் உடனே அ.கா.பெருமாளின் கட்டுரை உங்கள் நாட்டாரியல் ஈடுபாடு பற்றிச் சொல்கிறது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் கட்டுரை அலசல்தன்மை கொண்டது என்றால் இங்கே நம் சூழலிலுள்ள அபத்தமான அரசியலைச் சுட்டிக்காட்டுகிறது அமிர்தம் சூரியாவின் நேர்மையான கட்டுரை. அமிர்தம் சூர்யா அத்தனைபேருக்கும் வேண்டியவராக ஏன் இருக்கிறார் என தெரிகிறது. அவருடைய நேர்மைதான் அவருடைய முதன்மைத் தகுதி. சிறப்பான கட்டுரைகள். ஓர் எழுத்தாளர் பற்றி இத்தனை அரிய கட்டுரைகள் வருவது மகிழ்ச்சியூட்டும் விஷயம்

என்.செந்தில்குமார்

 

அன்புள்ள ஜெ,

சியமந்தகத்தில் லக்ஷ்மி மணிவண்ணனின் கட்டுரையை வாசித்தேன். கறாரான பார்வை. ஆனால் உணர்ச்சிகரமானதும்கூட. ஒரு கவிஞனுக்குரிய கூரிய பார்வையுடன் தொடர்ச்சியாக உங்களை பார்த்து, உங்கள் மாற்றங்களை பதிவுசெய்திருக்கிறார். அந்தக்கூர்மைதான் அதன் அழகு என நினைக்கிறேன்.

மா.கணேசன்

 

அன்புள்ள ஜெமோ

சியமந்தகம் இதழில் குக்கூ சிவராஜ் எழுதிய கட்டுரை என் கண்களில் நீர் வரவழைத்தது. ஆத்மார்த்தமான கட்டுரை. அந்த வரிகள் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் நெகிழ்ச்சி அற்புதமானது. ஓர் எழுத்தாளராக உங்கள் வெற்றி என்பது இத்தனைபேரை செயலுக்குத் தூண்டியிருக்கிறீர்கள் என்பதுதான்

ஜி.செல்வக்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.