சு.வேணுகோபால்
நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் 17-வது வெண்முரசு கூடுகை, வரும் 29-5-2022 ,ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
இதில் வெண்முரசு நூல் வரிசையின் ஆறாவது படைப்பான “வெண்முகில் நகரம்” நாவலின், 13 முதல் 15 வரையுள்ள பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பகுதிகள்:
பகடையின் எண்கள்நிழல் வண்ணங்கள்யானை அடி
இதைத் தொடர்ந்து, பிற நாவல் வரிசையில் திரு. சு. வேணுகோபால் அவர்களின் ‘நுண்வெளி கிரகணங்கள்’ நாவலின் மீது கலந்துரையாடல் நிகழும்.
வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 29-05-22, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
Published on May 25, 2022 11:30