திருப்பூர் கட்டண உரை- அறிவிப்பு  

நண்பர் ஈரோடு கிருஷ்ணன் கட்டண உரைகள் மேல் பெரும் ஈடுபாடு கொண்டவர். அந்த உரையில் ஒரு தீவிரத்தன்மை இருக்கிறது என நினைக்கிறார். கேட்பவர்களும் பேசுபவரும் அதை முக்கியமான நிகழ்வென முன்னரே முடிவுசெய்துவிடுகிறார்கள். அதற்கு அவர் உதாரணமாகச் சுட்டுவது இதுவரை எந்தக் கட்டண உரைக்கும் எவரும் பிந்தி வந்ததே இல்லை.

கொரோனா முடிந்ததுமே கட்டண உரை பற்றிச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். நான் பலவகை அலைச்சல்களில் ஒத்திப்போட்டுக் கொண்டிருந்தேன். இந்த உரையை சட்டென்று முடிவுசெய்துவிட்டோம். அதிக நாட்கள் இல்லை. ஆனால் பார்ப்போம்.

இதற்கு முன் ஆற்றிய உரைகள் பண்பாடு பற்றியவை. இதுவும் அப்படியே.  பண்பாடு, மதம் ஆகியவற்றின் இரண்டு நிலைகள் பற்றி பேசுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் வரலாம்.

திருப்பூர் கட்டண உரை- அறிவிப்பு 

நண்பர்களே,

ஞானகங்கை மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வருகிற  10-4-2022 ஞாயிறு மாலை 6  முதல் 8.15 வரை திருப்பூரில் ஜெயமோகன் ஒரு கட்டண உரை நிகழ்த்துகிறார். இது அவர் நிகழ்த்தும் நான்காவது கட்டண உரை.

தேநீர் இடைவேளையுடன் இரு பகுதிகளாக இந்த உரை நிகழும். ‘கல்தூணும் கனிமரமும் – பண்பாட்டையும் மதத்தையும் பெற்றுக்கொள்ளுதல்’ என்கிற தலைப்பில்  வேறெங்கும்  நிகழ்த்தாத  உரையை ஜெயமோகன் இங்கு நிகழ்த்துகிறார். இதன் காணொளியை யு டியூபில் உடனே காண இயலாது. இது சுமார் 250 பேர் அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட அரங்கு.  அவரைத் தவிர வேறு யாரும் மேடையில் அமர மாட்டார்கள்.

முன் பதிவில்லாமல் வரும் நபர்கள் இடமிருக்கும் பட்சத்தில் கட்டணம் செலுத்தி உரையை கேட்கலாம்.

இக்கூட்டத்திற்கு வர விரும்புவோர்  கீழ்கண்ட கணக்கிற்கு தலா ரூ 300/- செலுத்தி உங்கள்

பெயர்:

தற்போதைய ஊர் :

தொலைபேசி :

மின்னஞ்சல் :

ஆகிய விபரத்துடன் எனக்கொரு தனி மடல்  இட்டு முன் பதிவுசெய்து கொள்ளவும். உங்களது பதிவை சரிபார்க்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் சுமார் 20 நிமிடம் முன்னதாகவே வந்து அமருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்வு ரத்து செய்யப்பட்டாலோ தேதி மாறினாலோ கட்டணம் திரும்ப செலுத்தப் படும்.

நாள், நேரம் : 10.4.22, ஞாயிறு, 5.30 மணி

இடம்:  காயத்திரி ஹோட்டல் a/c ஹால், காங்கேயம் சாலை, திருப்பூர்.

வங்கிக் கணக்கு :

Account number :- 168401504235

Bank Name :- ICICI BANK

Account Type :- Savings

Account holder’s name :- PARI ANBAZHAGAN

IFSC Code :- ICIC0001684

VPA :- 9500384307@icici

இப்படிக்கு,

பாரி

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

மின்னஞ்சல் : mailmemechatron@gmail.com

பேச : 9500384307

திருப்பூரில் தொடர்புகொள்ள :

ராஜமாணிக்கம்

பேச :  7200855666

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 21, 2022 09:42
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.