அம்மாவின் திருமணம்
இன்று நாகர்கோயில் வந்துசேர்ந்தேன். நண்பர் ஒருவர் அழைத்து ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய பங்குனி திருவிழாவுக்குச் அவரும் வருவதாகச் சொன்னார். ஆகவே சேர்ந்தே போகலாம் என ஒரு திட்டம் போட்டேன். மார்ச் 19,20 இருநாட்களிலும் விழா நடைபெறுகிறது.
20ஆம் தேதி 10ம் திருவிழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்திலும் அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் ஆராட்டுக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது .இரவு 7 மணிக்கு அன்னதானமும் தொடர்ந்து பல்சுவை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில்பவனி வருதலும் நடைபெறுகிறது.
ஒரு திட்டம். 19 ஆம்தேதி மாலை நான் ஆரல்வாய்மொழியில் ஏதாவது விடுதியில் அறைபோடுகிறேன். வரவிரும்பும் நண்பர்கள் வரலாம். மறுநாள் அதிகாலையிலும் வரலாம். காலை முதல் இரவு வரை விழாவில் பங்கெடுத்தபின் இரவில் பிரியலாம். வரவிரும்பும் நண்பர்கள் மின்னஞ்சல் செய்யவும்
ஜெ
jeyamohan.writerpoet@gmail.com
Published on March 14, 2022 21:46