அன்னையின் பயணம்- கடிதங்கள்

ஓர் அன்னையின் பயணம்

அன்புள்ள ஜெ

ஓர் அன்னையின் பயணம் ஒரு அருமையான கட்டுரை. அவர் வெண்முரசுடன் கொண்டிருக்கும் உறவை நினைக்கையில் உண்மையில் இலக்கியத்தின் பயன் என்ன என்று புரிகிறது. திரும்பத்திரும்ப இங்கே எழுத்தால் என்ன பயன், வாசிப்பால் என்ன பயன் என்று கேட்பதுண்டு. ‘பத்து பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா?’ என்று என் அப்பா கேட்பார். பைசாவால் எந்த பிரயோசனமும் இல்லாத நிலை வாழ்க்கையில் உண்டு. அப்போது கூட வருவது எழுத்துதான். அது அளிக்கும் உலகம் ஆன்மிகம் அளிக்கும் நிறைவுக்கு நிகரான ஒன்றை அளிப்பது. நான் அதை ஒரு இக்கட்டான சூழலில் உணர்ந்தேன். அந்த அம்மாவுக்கு என் நமஸ்காரம்

ஜே.ராதாகிருஷ்ணன்.

 

அன்புள்ள ஜெ,

ஓர் அன்னையின் பயணம் அற்புதமான ஒரு கடிதம். நான் என் வாழ்க்கையின் சாராம்சமாக வாசிப்பை என்ணிக்கொள்பவன். வாசிப்பு எனக்கு என்ன தருகிறது என இன்னொருவருக்குச் சொல்ல என்னால் முடியாது. வேறு எதுவும் தராத ஒன்றை தருகிறது என்று மட்டும்தான் சொல்வேன். இந்தக் கடிதம் அது என்ன என்று சொல்கிறது

ரவி சிவக்குமார்

அன்புள்ள ஜெ

ஓர் அன்னையின் பயணம் முக்கியமான ஒரு கடிதம். வெண்முரசு பற்றி சொல்லும்போது அத்தனை பெரிய நாவலை யார் படிப்ப்பார்கள் என்று சிலர் கேட்பதுண்டு. நான் சொல்வேன், வாசிப்பவனுக்கு அந்த நூல் இரண்டுமாத தவம், சீக்கிரம் முடிந்துவிடும். அதன்பின் பெரிய ஏக்கம்தான் மிஞ்சும் என்று. நல்ல வேளை. உங்கள் வாசகர்கள் வாழ்நாள் முழுக்க உங்களை வாசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்.

அந்த அன்னைக்கு நூல் முடிவுறாது நீளவேண்டும்

எம்.சரவணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 01, 2022 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.