சோர்பா

முதன்முறையாக நீகாஸ் கசந்த்சாகீஸ் தமிழுக்கு வருகிறார். அதுவும் கமலக்கண்ணனைப் போன்ற தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் வழியாகக் கசந்த்சாகீஸ் தமிழில் அறிமுகமாவது மேலும் சிறப்பானது. கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்கிற வேகத்தைக் கண்டு நான் வியக்காமல் இருந்ததே இல்லை. அவரது தனித்தமிழ் பயன்பாடாகட்டும், கச்சிதமான சொல்லாட்சிகளாகட்டும், கவனச் சிதறல்கள் ஏதுமின்றி தான் எடுத்துக்கொண்ட பணியைக் கர்ம சிரத்தையுடன் மேற்கொள்வதிலுள்ள துடிப்பாகட்டும், சிக்கலான விஷயங்களைப் புரிந்துகொள்வதிலுள்ள அறிவாண்மையாகட்டும், இத்தனை குணாம்சங்களும் பொருந்திய ஒரு மொழிபெயர்ப்பாளர் தமிழிலக்கிய உலகிற்கு அரிதாகவே கிடைத்திருக்கிறார்.

சோர்பாவை ஏன் வாசிக்கவேண்டும்?

கசந்த்சாகீஸ் ஒரு மறுப்புவாதி. தற்கணத்தின் மகிழ்ச்சியை மட்டுமே அவர் ஏற்கிறார். அந்த மகிழ்ச்சியை விடுதலையடைவதன் வழியாக மட்டுமே மனிதர்கள் அனுபவிக்க முடியும் என்பது அவரது வாதம். எவற்றிலிருந்து விடுதலை? எல்லாவற்றிலிருந்தும். அதன் வாய்ப்புகளை ஆராய்வதற்காக உணர்ச்சிகர நிகழ்வுகளை விலக்கி முழுக்க முழுக்கச் சிந்தனைக் குவியல்களின் தொகுப்பாகப் புனையப்பட்டுள்ளது இந்நாவல். இதில் சிந்தனை என்பது நிலைத்தன்மையுடையதாக (static) அல்லாமல் நடன அசைவுகள் கொண்ட செயலூக்கமாக (dynamic) முன்வைக்கப்படுகிறது. நமது முன்முடிவுகளையும் செக்கு மாட்டு வாழ்க்கையையும் மறுபரிசீலனை செய்ய வற்புறுத்துகிறது. அதன் காரணமாக, கசந்த்சாகீஸின் புகழ்பெற்ற இந்நாவல் குறித்த பேச்சு இலக்கிய உலகில் எப்போதும் இருக்கிறது

கோகுல் பிரசாத்

நீகாஸ் கசந்த்சாகீஸ் Translator: கோ. கமலக்கண்ணன்Publisher: தமிழினி

 

சோர்பா    எனும்   கிரேக்கன் – அருண்மொழி நங்கை  

சோர்பா கடிதங்கள்

சோர்பா கடிதங்கள் 2

சோர்பாவும் நித்யாவும்- கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.