புனைவுக் களியாட்டு நூல்கள் புத்தகக் கண்காட்சியில்- கடிதங்கள்

புனைவுக் களியாட்டு, புதிய நூல்கள்

அன்புள்ள ஜெ

புனைவுக் களியாட்டு வரிசையில் வந்துள்ள நூல்களை அச்சு வடிவில் இன்று வாங்கினேன். நான் இவை பெருந்தொகுதிகளாக வரும் என நினைத்தேன். பெருந்தொகுதிகளாக வருவது ஒருவகையில் நல்லது. அவை நம்முடைய கவனத்திலேயே இருந்துகொண்டிருக்கும். நூல்களுக்கு ஒரு கெத்து இருக்கும். ஆனால் பெருந்தொகுதிகளை நாம் அடிக்கடி எடுத்து படிப்பதில்லை என்பதும் உண்மை.

சிறிய தொகுதிகளாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியை அளித்தது. கதைகளின் அமைப்புக்குள் ஓர் ஒருமை இருந்தது. அதிலும் திபெத்தியக் கதைகள் கொண்ட தங்கப்புத்தகம் ஒரு மிஸ்டிக் நூல் போலவே அற்புதமான வாசிப்பனுபவம். தொடராக வெளிவந்தபோது எல்லா கதைகளையும் அப்படி வாசித்திருக்க மாட்டோம். இப்போது வரிசையாக வாசிக்கையில் ஒரே நாவல்போல தோன்றுகின்றன. ஒரு பெரிய இலக்கிய அனுபவம் அந்த நூல்.

முதுநாவல் புத்தகமும் அதேபோல ஒரு நல்ல ஒற்றை அனுபவமாக அமையும் என நினைக்கிறேன்.

ஆர்.குமார்

அன்புள்ள ஜெ,

சென்னை புத்தகக் கண்காட்சியில் புனைவுக் களியாட்டு நூல்களை வாங்கினேன். புனைவுக்களியாட்டு கதைகளை ஏற்கனவே படித்திருந்தாலும் இப்படி பொதுவான தீம் கொண்ட நூல்களாக வாசிப்பது அபாரமான அனுபவமாக இருந்தது. பத்துலட்சம் காலடிகள் நூலில் எல்லா கதைகளிலும் ஔசேப்பச்சன் வருகிறார். ஔசேப்பச்சனை நீங்கள் தொடர்ந்து வளர்த்தெடுக்கவேண்டும் ஜெ. அற்புதமான கதாபாத்திரம் அது. துப்பறியும் கதாபாத்திரங்களுக்கே ஒரு செயற்கைத்தன்மை வந்துவிடும். இவர் இயல்பாக நானறிந்த 99 சதவீதம் சிரியன் கிறிஸ்தவர்களைப்போல பீஃபும் குடியும் நையாண்டியுமாக இருக்கிறார்.

மகாதேவன்

 

அன்புள்ள ஜெ

புனைவுக் களியாட்டு அச்சுநூல்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். அமைப்பும் அட்டை வண்ணங்களும் மென்மையானவையாக அழகானவையாக இருந்தன. வடிவமைப்பாளருக்கு என் பாராட்டுக்கள்.முதுநாவல்தான் மிக அழகான அட்டை.

எஸ்.ஆர்.விஸ்வநாத்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.