தன்னறம்- உரைகள்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

கடந்த 28.01.22 அன்று, ஈரோட்டில் டாக்டர் ஜீவா நினைவு அறக்கட்டளை அரங்கில் நிகழ்ந்த ‘தன்னறம் இலக்கிய விருது விழா’ என்பது எல்லாவகையிலும் எங்கள் எல்லோரின் அகத்தை நிறைக்கும்படி அமைந்தது. தமிழின் மூத்த படைப்பாளுமை மனிதரான எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு உங்கள் கைகளால் தன்னறம் விருது அளிக்கப்பட்டதை சமகால நல்லசைவுகளுள் ஒன்றாக நாங்கள் கருதுகிறோம். நிகழ்வுக்கு வந்திருந்த விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களின் அன்புக்குரிய வாழ்த்துகள் இப்பவரை நீடிக்கின்றன. இந்நிகழ்வுக்காகத் தங்கள் உழைப்பை முழுதுற வழங்கிய அனைத்து தோழமைகளையும் நன்றியுடன் இக்கணம் நினைத்துக்கொள்கிறோம்.

2021ம் ஆண்டிற்கான தன்னறம் இலக்கிய விருதளிப்பு நிகழ்வில் நீங்கள் ஆற்றிய உரை மற்றும் தேவிபாரதி அவர்களின் ஏற்புரை காணொளிகளை இத்துடன் இணைத்துள்ளோம். எக்காலத்தும் எங்கள் எல்லா முயற்சிக்கும் ஆசிவழங்கி அதை முன்னகர்த்தத் துணைநிற்கும் உங்களுக்கும், உங்களைச்சூழ்ந்த அத்தனை மனிதர்களுக்கும் தீராநன்றிகள்.

~
தன்னறம் இலக்கிய விருது – 2021

 

 

நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி

www.thannaram.in

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.