கதாவிலாசம்
தமிழின் சிறந்த நூல்களைப் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்வதற்காகத் தமிழக அரசு புதிய திட்டத்தினை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் சார்பில் நடைபெறும் இத்திட்டத்தில் சிறந்த தமிழ்ப் படைப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.

தமிழக அரசு இத்திட்டத்துக்குப் பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது. பழைய பாடநூல்கள் மறுபதிப்பு, நாட்டுடைமை ஆக்கப்பட்ட அச்சில் இல்லாத நூல்களின் பதிப்பு, ஆங்கிலப் பதிப்பகங்களுடன் இணைந்து தமிழ் இலக்கிய ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது போன்ற பணிகள் இத்திட்டத்தின் மூலம் நடைபெற்று வருகின்றன
இந்த ஆண்டு ஆறு நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டுள்ளார்.


அதில் எனது கதாவிலாசம் கட்டுரைத் தொகுப்பு புகழ்பெற்ற Taylor & Francis நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரும்பணிக்குக் காரணமாக அமைந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, உதயச்சந்திரன் ஐஏஎஸ், பாடநூல் கழகத்தலைவர் லியோனி, பாடநூல் கழக இயக்குநர் டாக்டர் சங்கர சரவணன், மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மினி கிருஷ்ணன். மொழிபெயர்ப்பாளர்கள் மாலினி சேஷாத்ரி, P.C.ராமகிருஷ்ணன், வெளியீட்டுப் பிரிவு ஆலோசகர் அப்பணசாமி உள்ளிட்ட அனைவருக்கும் நிறைந்த அன்பும் நன்றியும்.
இந்த நூல் புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகப் பாடநூல் கழக அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கிறது
****
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
