ஏழாம் உலகம்- கடிதங்கள்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

அறத்தைப் புறந்தள்ளி என்னால் எதுவும் எழுத முடியாது என்று ஜெமோ ஒரு மேடையில் சொன்னார். ஏழாம் உலகம் நாவலின் குரூரத்தை படிக்க தொடங்கும் முதலில் பெரும்அறத்தை சொல்லியிருப்பார் என்று காத்திருந்தேன்.

முத்தம்மை பிள்ளைப்பேறு பின் வேண்டாம். அது சாவட்டு… கிடந்து சீரழிய வேண்டாம். சாவட்டு. எனும் கதறல் காதில் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே நாவல் நகர்கிறது. மற்றொரு இடத்தில் முத்தம்மை எப்பவும் வல்ல குருடோ கூனோ தானே அணையைவிடுதாக‌ என்பதொல்லாம் பெரும் வலியை விதைத்து கொண்டே நகர்கிறது.

பண்டாரம் வாசல் வரை ஒரு வாழ்க்கையும் வாசல் தாண்டி வேறு வாழ்க்கையும் வாழ்கிறார். இவ்வளவு அன்பு செலுத்தும் மனிதன் எப்படி ஒரு பச்சைக் குழந்தையை வெயிலில் போட்டு தண்ணீர் தெளிச்சு பிச்சை எடுக்கச் சொல்லும் அளவிற்கு குரூரமான என்று நம்பமுடியவில்லை. இளைய மகளுக்கு வளவி வாங்கி வருவது, பிரிந்த மகளை நினைத்து வருந்தும் போது இயற்கை மூலம் அதில் இருந்து மீண்டு வருதல் எல்லாம் அபாரம். எப்படியும் பண்டாரத்தின் மீது அன்பு அதிகமாக வழிகிறது.

உன்னியம்மை ஆச்சி போல் ஒருவரே எல்லோரும் நிச்சயம் பார்த்திருப்போம்.எருக்கி, மண்ணாங்கட்டி சாமி, பெருமாள், வடிவம்மை, சுப்பம்மை, ஏக்கியம்மை, பண்டாரத்தின் சம்மந்தி என  யாரும் மறக்க முடியாத கதை மாந்தர்கள் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த குரூரமான நாவலில் எனக்கான அறமாக இந்த வரிகளை ஏற்றுக் கொள்கிறேன்.”நான் சொல்லுயத கேட்டுக்கோ. எந்த ஒரு விஷயம் வந்தாலும் ஒரு காரியம் நினைச்சுக்கோ. அந்த நிமிசத்தில ‌ இந்த நேரத்துல அது பெரிய காரியமாக இருக்கும். ஒரு பத்து நாள் போனால் எல்லாம் சின்ன காரியமா மாறிப்போகும்.”

எனக்கும் பத்து நாள் தேவைப்படுகிறது.

நன்றி

மணிகண்டன்

***

அன்புள்ள ஜெ

ஏழாம் உலகம் வாசித்துக்கொண்டிருந்தேன். மனிதன் மேல் மனிதன் காட்டும் குரூரத்தின் எல்லைகலை தாண்டித்தாண்டிச் சென்றுகொண்டிருந்த நாவல் குய்யனுக்கு அத்தனை உருப்படிகளும் சேர்ந்து சாப்பாடு வாங்கிக்கொடுக்கும் இடத்தை அடைந்ததும் என்னை நெகிழச்செய்துவிட்டது. உண்மையில் கண்கலங்கிவிட்டேன். சில படைப்புகளில்தான் இப்படி நெஞ்சில் கைவைத்து ‘மனிதன்!’ என நாம் சொல்லும் சந்தர்ப்பங்கள் அமைகின்றன. அன்றிர்வு பாடாத மாங்காண்டிச்சாமி பாடும்போது ஆன்மிகம் என்றால் என்ன என்றும் தெரிந்துகொண்டேன்.

கே.ஆர்.ஆறுமுகம்

ஏழாம் உலகம்- கடிதங்கள்

ஏழாம் உலகம்- கடிதம்

ஏழாம் உலகம் -கடிதம்

ஏழாம் உலகம்- கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.