உரைகள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

எழுத்தாளனின் குரல் ஒரு வாசகனுக்கு எவ்வளவு முக்கியம்.அவன் ஆற்றும் கருத்துக்கள் வாசகனின் மனதில் எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் எழுத்தாளர்கள் கொஞ்சம் ப்லசமயம் ரொம்ப எளிமையாக உரையாற்றுகிறார்கள்.

இந்த வலையுகத்தில் எல்லோரும் பேசுகிறார்கள். நெஞ்சு புடைக்க அது ஒரு நடிப்பு போல அழகாக நடிக்கிறார்கள். இவைகளை கண்டு சோர்ந்து போன வாசகன் எழுத்தாளனின் குரலை கேட்க ஆவல் கொள்கிறான்.எழுத்தாளனும்
அவ்வாறே பேசுவது பெரிய ஏமாற்றம்.

நீங்கள் ஒரு பேச்சில் சொல்கிறீர்கள்.காந்தி இங்கிலாந்து மன்னரை காண சென்றிருக்கிறார்.இவர் வெறும் உடம்போடு எந்த நெருடலும் இன்றி மிக இயல்பாக ஆனால் எதிரே மன்னர் மிகுந்த கூச்சத்தோடு நெளிந்து அமர்ந்திருப்பதாக.

இந்த மாதிரியான சொற்பொழிவுகளே வாசகனை பாதிப்பவை.நீங்கள் பேசும் முறைமுற்றிலும் தற்கால பேச்சாளர்களின் பேசுமுறைக்கு எதிராக உள்ளது.

அந்த பேச்சாளர்களில் சோர்வடைந்தவனின் மறுகரை நீங்கள்.உங்களின் எந்த சொற்பொழிவையும் நான் தவறவிட்டதில்லை.நீங்கள் புதிய சொற்பொழிவு எதுவும் ஆற்றாதபோது ஜெய காந்தனின் பல முறை கேட்ட சொற்பொழிவையே திரும்ப திரும்ப கேட்பேன்.வளர்ந்து வரும் செடிக்கு அவ்வப்போது நீர் ஊற்றுவது போல.

அன்புடன்
ரகுபதி
கத்தார்.

அன்புள்ள ஜெ

உங்கள் சொற்பொழிவுகளைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதியவை குவிந்து கிடக்கின்றன. நான் அன்றாடம் உங்களை வாசித்துக்கொண்டிருப்பவன். ஆனாலும் இந்தச் சொற்பொழிவுகள் எனக்கு முக்கியமானவை. ஏனென்றால் இவற்றில் உங்கள் குரலும் முகமும் உள்ளன. இவற்றை நான் கேட்கும்போது உங்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் உணர்வு உருவாகிறது. இந்தக்குரல் உங்கள் கட்டுரைகளிலும் ஒலிக்கிறது எனக்கு.

உங்கள் குரலில் ஒரு மலையாளநெடி இருக்கிறது. அந்த ஊருக்கான சில சொற்கள் உள்ளன. இருக்கக்கூடியது என்பதுபோலச் சொல்கிறீர்கள். உங்கள் உச்சரிப்பு கடைசி சிலபில்களை முழுங்கிவிடுகிறீர்கள். சிலசமயம் மூச்சுவாங்குகிறீர்கள். கத்திப்பேசும் அளவுக்கு குரல்வளம் இல்லை. கொஞ்சம் உடைந்தகுரல்தான். தயங்கியபடித்தான் பேச ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் சொல்லும் எல்லாவற்றையுமே ஆத்மார்த்தமாக எந்த பாவனையும் இல்லாமல் நடிக்காமல் சொல்கிறீர்கள். அதுவே ஒரு பெரிய தகுதி. உங்களை மிக நெருக்கமாக உணரச்செய்வது அதுதான்.

கீதைச் சொற்பொழிவு சங்கரர் சொற்பொழிவு ஓஷோ சொற்பொழிவு ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தமானவை. கோவையில்தான் இப்படி உங்களை அழைத்துப் பேசவைக்கும் எண்ணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். கோவையின் கலாச்சாரநிலை மற்ற தமிழ்ப்பகுதிகளுக்கு இல்லை

ஆர்.ராஜேந்திரன்

உரைகள்

https://www.youtube.com/channel/UClt2oB6p4YwSEZcfyyujJjg

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 27, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.