இன்றைய சூழலில் சிங்கப்பூர் இலக்கியத்தின் முன் உள்ள சவால் என்பது இதுதான்… அடையாளங்களைக் கடந்து அடையாளங்களை ஆக்கி விளையாடும் வரலாற்று விசைகளை, பண்பாட்டு உட்குறிப்புகளைப்பற்றியும் பேசுவது. மானுட உணர்வுகளை அந்த பெரும் பகைப்புலத்தில் வைத்துப்பார்ப்பது. இந்நாட்டின் இச்சமூகத்தின் உள்ளத்தையும் ஆளுமையையும் வடிவமைத்துள்ள அனைத்து பண்பாட்டுக்கூறுகளையும் கண்டடைவது, அதன் உளவியல்கூறுகளை கட்டமைத்திருக்கும் ஆழ்படிமங்களை மீட்டு எடுப்பது.
சிங்கப்பூர் உமறுப்புலவர் மையத்தில் 15-9-2016 அன்று நிகழ்ந்த சிங்கப்பூர் இலக்கிய போக்குகள்குறித்த கருத்தரங்கில் ஜெயமோகன் பேசிய உரையின் வரிவடிவம்.
Published on January 12, 2022 10:35