நாதன் கிடத்தப்பட்டிருந்தான். மணிமாலா நாதனின் தலைமாட்டில் அமரவைக்கப்பட்டாள். அவளருகில் உட்காரத் தயங்கியோ விரும்பாமலோ இருவர் நகர்ந்து அமர்ந்தனர். மணிமாலாவுக்கு அவர்களை யாரென்று அறிந்து கொள்ளும் விருப்பமில்லை. வெறித்த பார்வை தான் எத்தனை வசதி என்று மணிமாலா அன்று உணர்ந்தாள். அவள் முன்பாக நடக்கும் சங்கதிகளை அவள் விரும்பாமலேயே கேட்டபடி இருந்தாள்.