சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலைப்பற்றி ராயகிரி சங்கர் எழுதிய குறிப்பு. ஜே.ஜே.சில குறிப்புகளின் கதைநாயகனாகிய ஜேஜேதான் உண்மையில் ஒரு கலகக்காரன் என்னும் வரையறைக்குள் வருபவன். சிந்தனையாளனின், கலைஞனின் கலகம் என்பது முதன்மையாக சிந்தனையிலும் கலையிலும் நிகழ்வதே. சிந்தனையில் வழக்கமான தேய்ந்தபாதையில் சென்றுகொண்டு, கலையில் ஒன்றும் நிகழ்த்தாமல், அன்றாடத்தில் சீரழிவது கலகம் அல்ல. அது சீரழிவு மட்டும்தான். அங்கே இயலாமைக்கு துணையாக சிந்தனையாளன் கலைஞன் என்னும் பாவனைகள் கையாளப்படுகின்றன என்றே எண்ணவேண்டும். ஜே.ஜே. தன் காலகட்டத்தின் எதையும் நம்பமுடியாமல் தொந்தரவுகொண்ட ஆன்மா.
ஒரு கலகக்காரனின் கதை – ஜே. ஜே. சில குறிப்புகள் நாவல் ராயகிரி சங்கர்
Published on November 06, 2021 11:34