இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்: வெங்கி பிள்ளை

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் கிண்டில் வாங்க இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

இந்து மதத்தின் வேர்களையும் அதன் வைப்பு முறைகளான வேதங்கள், ஆறு தரிசனங்கள், ஆறு மதங்கள் மற்றும் மூன்று தத்துவங்களை பற்றிய அடிப்படை புரிதல்களை ஏற்படுத்துகிறது.

ஆறு தரிசனங்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று மோதி..விவாதித்து…ஒன்றில் ஒன்றை நிரப்பி …ஒன்றை ஒன்று உண்டு வளர்ந்து இந்து மதத்தை …மெய்ஞான மரபை வளர்த்தெடுத்தது என்பதை விரித்து எழுதியருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

ஆறுதரிசனங்கள்:
1) ஆதி இயற்க்கைவாதம் – சாங்கியம்
2) தூய்மையான அறிதல்முறை – யோகம்
3) அணுக்கொள்கை – வைசேஷிகம்
4) தருக்கமே தரிசனம் – நியாயம்
5) மையநூல்வாதம் – பூர்வமீமாம்சம்
6) முதல் முழுமைவாதம் – வேதாந்தம்.

இவற்றில் நான்காவது தரிசனமான ….தருக்கமே தரிசனம் என்னும் நியாய தரிசனம் ….கடவுள் இருப்பை மறுக்கிறது. பகுத்தறிந்து விவாதித்து நிறுவக்கூடியவற்றை மட்டுமே ஏற்கிறது. அறிவே பிரம்மம் என்கிறது. இந்த வகையில் திராவிடத்தின் பகுத்தறிவுவாதம் இந்து மெய்ஞான மரபின் ஒரு பகுதிதான் என்று சொல்லலாம்.

ஆனால் குப்த பேரரசு காலகட்டத்தில் ..பூர்வமீமாம்சத்தின் வேள்வி/புரோகித மரபும்….பிறகு சங்கரர் வளர்த்தெடுத்த வேதாந்தமும் பிற தரிசனங்களை உள்ளிழுத்து தத்துவங்களை ஆணித்தரமாக முன்வைத்து இந்து மதத்தின் முகமாக தன்னை நிறுவிக்கொண்டது என முடிக்கிறார்.

ஆனால் …ஓரே வாசிப்பில் ….. அனைத்து தகவல்களை வாசித்தெடுத்து செரித்துக்கொள்ள முடியாது. கடினமான சொல்நடையில் இருப்பதால் …மறு வாசிப்புகள் அவசியம்.

 

வெங்கி பிள்ளை

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -சுயாந்தன்

அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2021 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.