அஞ்சலி:காயல்பட்டிணம் கேஎஸ் முகம்மது சுஐபு

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் இழப்பு என்பது வாழும் சமூகத்தில் ஈடுசெய்ய இயலாதது. அதுவும் சிறுவயது முதல் பெற்றோர்கள் திண்பண்டங்களுக்காக கொடுத்த பணத்தை கூட புத்தகங்களாக வாங்கி குவித்தவர் காயல்பட்டிணம் கேஎஸ் முகம்மது சுஐபு. அவர் 12.10.2021 அன்று இயற்கை எய்தினார். சமையல்கட்டு, பரண், பாத்திரங்களுக்கு நடுவே இன்றளவுக்கு அவர் வீடு முழுதும் ஆயிரத்தி ஐநூறு புத்தகங்கள் நிறைந்துகிடக்கிறது. மரணித்தவரை கட்டிலில் இருந்து தூக்கும் போது கூட அவரது பக்கவாட்டில் பனிரெண்டு புத்தகங்களை அப்புறப்படுத்திவிட்டு தூக்கினர். அவர் உடலை அடக்கம் செய்துவிட்டு உறவினர்கள் வீட்டுக்குள் நுழைந்த போது அவர் முன்பு ஆர்டர் செய்திருந்த ஐந்து புத்தகங்கள் வீடுதேடி வந்தது.

முகம்மது ரியாஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 17, 2021 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.