இலங்கையில் இருந்து வெளிவரும் வனம் இணைய இதழில் வெளிவந்துள்ள என்னுடைய நீண்ட பேட்டி. என் உரையாடல்கள் வெவ்வேறு வடிவில் வெளியாகியிருக்கின்றன. இப்போது பார்க்கையில் பெரும்பாலும் எல்லா இதழும் தொடங்கும்போது என் பேட்டி அல்லது கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது என தோன்றுகிறது. வனம் இதழ் ஈழ இளைஞர்கள் ஷாதிர் யாசீன், சாஜித் அஹமட், சப்னாஸ் ஹாசிம் ஆகியோரால் நடத்தப்படுகிறது. ஒரு நீண்ட சூம் உரையாடலை ஒட்டி தயாரிக்கப்பட்ட பேட்டி இது. அப்போது சூமில் மேலும் பல நண்பர்கள் இருந்தனர்.
பொதுவான பிற பேட்டிகளுக்கும் இதற்குமிடையே உள்ள வேறுபாடு என்பது ஈழத்து இலக்கியம் மற்றும் ஈழத்தவருக்கு இங்குள்ள இலக்கியச்சூழல் பற்றி இருக்கும் குழப்பங்கள் பற்றி சற்று கூடுதலாகப் பேசப்பட்டுள்ளது என்பதுதான்.
எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நேர்காணல்
Published on October 12, 2021 11:35