விஷ்ணுபுரம் விருது, விக்ரமாதித்யனுக்கு.

2021 ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. நம்பிராஜன் என்னும் பெயர்கொண்ட விக்ரமாதித்யன் எனக்கு 1986 ஆம் ஆண்டு முதல் அறிமுகம். முப்பத்தைந்தாண்டுகளாக. 1986ல் அவரைப் பற்றி நான் ஒரு ரசனைக்குறிப்பு எழுதினேன். அப்போது பயணத்தில் இருந்த அவர் காசர்கோடு வந்து என்னுடன் சிலநாட்கள் தங்கியிருந்தார்.

விக்ரமாதித்யனின் தனிவாழ்க்கைப் பயணங்கள் நானறியாத திசைவழிகள் கொண்டவை. ஆகவே அவருடன் கவிதைவழியாகவே அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தேன். முப்பத்தைந்தாண்டுகளில் அவரைப் பற்றி எழுதிக்கொண்டே இருந்திருக்கிறேன். அனேகமாக எல்லா நூல்களுக்கும் திறனாய்வு எழுதியிருக்கிறேன். முழுமையான மதிப்பீட்டுக் கட்டுரையும் எழுதியிருக்கிறேன். அவர் என் உள்ளத்திற்கு என்றும் இனிய கவிஞர். என்னுடன் இந்த ஆண்டுகளிலெல்லாம் ஊடாடிக்கொண்டே இருந்தவர்.

விக்கி அண்ணாச்சிக்கு இவ்விருதை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்

ஜெயமோகன்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

விக்ரமாதித்யன் விக்கி பதிவு

விக்ரமாதித்யன் கவிதைகள் சில

விக்ரமாதித்யன் நூல்கள்

விக்ரமாதித்யன் இணையப்பக்கம்

தட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும்

நம்பியின் சொல்

விக்ரமாதித்தன் அமேஸானில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2021 20:49
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.