என்ன இந்த உறவு, எதன் தொடர்வு?

’நன்னு தோச்சுகொந்துவதே’ நான் அடிக்கடிக் கேட்கும் பாடல். என் பிரியமான பீம்பளாஸி ராகம் என்பது ஒன்று. அதைவிட அந்தரங்கமான ஒன்று உண்டு. கதைநாயகி ஜமுனாவின் எல்லா படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு அருண்மொழியின் சாயல் தெளிவாகவே உண்டு. குறிப்பாகக் கண்கள். பழைய மிஸியம்மா படத்தில் சின்னவயசு அருண்மொழி போலவே இருப்பார்.

கண்டசாலாவின் குரல்மேல் பெரும் மோகம் எனக்கு உண்டு. அவருடைய பாடல்களை பிறர் பாடும்போது பாடல் மிகக்கீழே இறங்குவதை உணர்வேன். ரஃபி போல, ஜேசுதாஸின் மலையாளப் பாடல்களைப்போல, உள்ளுணர்ந்து பாடுபவர். ஏனாதிதோ மன பந்தம், எருகரானி அனுபந்தம் என்னும் வரியில் இருக்கும் மெய்யான உணர்ச்சி பாடல்களில் மிக அரிதான ஒன்று.

என்னை திருடிக்கொள்ளப்போகிறாயா அரசி?

என் கண்களில் அல்லவா

ஒளிந்துகொண்டீர்கள் அரசே?

நன்னு தோச்சு கொந்துவதே- பாடல் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும். பொருளுடன்

https://www.lyricspulp.com/2021/05/nannu-dochukunduvate-lyrics-gulebakavali-katha.html

படம் குலேபகாவலி கதா

பாடியவர்கள் கண்டசாலா, பி.சுசீலா

இசை ஜோசப்-விஜயகிருஷ்ணமூர்த்தி

பாடல் சி.நாராயணரெட்டி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.