யசோதை – அருண்மொழிநங்கை

இயக்குநர் வசந்த் கூப்பிட்டிருந்தார். “என்ன அருண்மொழி ரொம்ப நல்லா எழுதாறாப்ல?அசோகமித்திரனுக்கு அப்டி ஒரு சிஷ்யை?”என்றார். அருண்மொழியின் ஆதர்ச எழுத்தாளர் அவர்தான். அவருக்கும் அவள்மேல் பிரியம் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப்பின் எழுதுகிறாள். அவர் இருந்தபோது சில விமர்சனக்கட்டுரைகளே எழுதியிருந்தாள்.அவற்றையே அவர் பாராட்டியிருந்தார். இக்கட்டுரை- கதைகளை மிக விரும்பியிருப்பார்.

மென்மையானவை இவ்வனுபவங்கள். யசோதை என்னும் கட்டுரை- கதையில் மையமாக உள்ள மனநிகழ்வு ஒரு சிறுமி அன்னையாகும் பரிணாமம்.தம்பி மைந்தனாகிறான். அதை யசோதை என்னும் தலைப்பில் மட்டுமே குறிப்பு வைத்து மிக இயல்பான ஓட்டத்துடன் சொல்லி நிறுத்தியிருக்கிறாள்.

லெனின் கண்ணன் எனக்கு மிக நெருக்கமானவன். திசைகளின் நடுவே தொகுதியை முழுக்க தன் கையால் நற்பிரதி எடுத்தவன். அத்தொகுதி முன்னுரையில் அவனுக்கு நன்றி சொல்லியிருப்பேன். அவன் வாழ்க்கை அவனாலேயே விதியின் போக்குக்கு விடப்பட்டது. எங்கள் எவராலும் அவனை மீட்கமுடியவில்லை. இக்கட்டுரை எனக்கு நெஞ்சை அழுத்தும் ஓர் அனுபவம்

அருண்மொழி இதை வரிக்கு வரி கண்ணீர்விட்டபடி எழுதினதாகச் சொன்னாள். ஆனால் கட்டுரையில் துயரமே இல்லை. புனைவின் மாயம் என்பது இதுதான். ஏன் மெய்யையே புனைவாக ஆக்கவேண்டும் என்பதும் இதற்காகவே.

யசோதை – அருண்மொழிநங்கை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.