Error Pop-Up - Close Button Sorry, you must be a member of the group to do that. Join this group.

இரவின் இனிமை

யாமம் – நாவல் குறித்த விமர்சனம்

ஏழுமலை

••

எஸ் ராமகிருஷ்ணனின் வெயிலை போலவே இரவும் எத்தனை இனிமையானதாக இருக்கிறது நெடுங்குருதி வெயில் மையச் சரடாக வும் தொன்மை படிமமாகும் பின்னப்பட்டிருக்கும் இந்த நாவலில் இரவும் வரலாறும் அத்தர் வாசனையும் மையச் சரடாக இருக்கிறது.

யாமம் என்றால் இரவு, இரவை போல விளங்கமுடியாத இருளாக மனிதர்களும் அவர்களின் அகமும் இருக்கிறது என்பதையே இந்த யாமம் . ஒரு ஞானியிடம் இருந்து அத்தர் தயாரிக்கும் முறையைப் பெறும் அப்துல் கரீம் இரவை போலச் சுகந்தம் தரும் யாமம் என்ற வாசனை திரவியம் கண்டுபிடிக்கிறார். உயர்குடி முதல் சாதாரண மக்கள் வரை அந்த அத்தரை வாங்கிப் பூசிக் கொள்கிறார்கள் மதி மயக்கும் அதன் வாசனை காமத்தையும் கிளறுவதாக இருக்கிறது.

இந்த நாவலில் முதன்முதலில் என்பதே வரலாறாக மாறுகிறது முதல் முதலில் வெள்ளைக்காரர்கள் மிளகு வாங்கி விற்பதற்காக இங்கிலாந்தில் இருந்து வருகிறார்கள் பிறகு கரையானைப் போல் இந்தத் தேசத்தைச் சுரண்டுகிறார்கள். அதே போல முதன் முதலில் நில அளவைகள் எங்கிருந்து யாரால் தொடங்கப்பட்டது, சென்னை நகரத்தை ஒயிட் டவுன் பிளாக் டவுன் என்று இரண்டாகப் பிரிப்பது, முதல் தேயிலை இந்திய வருகை, முதல் கிறிஸ்தவ மதமாற்றம் இப்படி நாவலில் பின்னணியில் வரலாற்று இழையோடுகிறது. அந்த வரலாற்றில் விசித்திர நிகழ்வுகள் விசித்திர மனிதர்கள் சுவடே இல்லாமல் மறைந்து போன துயரமிகு வாழ்வின் வரலாற்று மீள்பதிவே யாமம்.

சதாசிவ பண்டாரம் காரணமே இல்லாமல் திருநீலகண்டம் என்ற நாய் சென்ற இடமெல்லாம் அலைந்து திரிந்து நாய் போன போக்கில் தன் வாழ்வை செலுத்தி இறுதியில் பட்டினத்தார் சமாதியில் முக்தியடைகிறார். வாழ்வில் எந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வை அதன் போக்கில் விட்டுப் பண்டாரம் கண்ட வாழ்வின் தரிசனத்தை நம்மையும் அடைய வைக்கிறது. நேர் எதிரில் வெள்ளைக்காரர்கள் நாய்களை வாங்கி வருவதும் பிறகு ஒரு வருடம் கழித்து அதுகளை வேட்டையாடிக் கொள்வதும் விசித்திரம் தானே?

கிருஷ்ணப்ப கரையாளர் சொத்துக்காக லண்டன் வரை கூட வழக்கை எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறார் ஆனால் அவரே தான் எந்தச் சொத்தும் பணமும் வேண்டாம் என்று கடைசியில் மறுக்கிறார். அவர் எலிசபெத்துடன் மலைக்குச் சென்று இயற்கையோடு தன் வாழ்க்கையைக் கழிக்கும் போது மனமாற்றம் அடைகிறார். இயற்கைக்கு மாறுதல் என்பது மனிதன் இயல்புக்கு திரும்புதல் என்ற என்றாகிறது இல்லையா?. எலிசபெத்தின் குழந்தைகால நினைவுகள், துயரங்கள் பின்பு அவள் வேசியாக மாறுவது என்பவையெல்லாம் வெளியேறமுடியாத இதயக் குமிழியாக இதயத்தில் எங்கோ தங்கிவிடுகிறது.

லண்டனில் போகத்திற்கான இடமாக நினைக்கும் சற்குணம் பிறகு லண்டனில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் புரட்சியாளனாக மாறுவது வியப்பான தருணம்.

லண்டனுக்குக் கணிதம் கற்க செல்லும் திருச்சிற்றம்பலம் திரும்பி வரும்போது காமத்தால் சிதைந்து போன குடும்பங்களையும் உறவுகளை இருந்தான். இதே போலத் தான் ராமானுஜம் கூடக் கணிதத்திற்கு வாழ்கை அற்பணித்து அவதியுற்றார். தையல் நாயகியின் பத்திரகிரி உறவையும் தொடக்கத்தில் கசப்பாக என்னும் பகுதியில் மனைவி விசாலா பிறகு அதை அதன்போக்கில் ஏற்றுக் கொள்கிறாள். இதில் வரும் மனிதர்கள், வாழ்வு தன் கையின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவிய ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களாக இருக்கிறார்கள். (தையல் திருச்சிற்றம்பலம் மனைவி)

யாமம் கண்டுபிடித்த கரீம் ஒரு கட்டத்தில் குதிரை பந்தயத்தில் மீது ஆசை வந்து அனைத்து சொத்துக்களையும் இழந்து ஒரு நாள் திடீரென்று காணாமல் போகிறார். பிறகு ஆண் வாரிசு இல்லாத அவரின் மூன்று மனைவிகள் சுரையா, வஹிதா, ரஹ்மானி ஆகிய மூவரும் வறுமையோடு வாகையையும் சேர்ந்து சுமக்க வேண்டியதாகிவிடுகிறது. பிறகு காலரா சென்னை மாகாணத்தைத் தாக்குகிறது பின் மரணஓலங்கள் எங்கும். நான்கு மாறுபட்ட நாவல்களை ஒரே நாவலில் சேர்த்து வாசிப்பதை போல இருக்கிறது எல்லாவற்றையும் இனைக்கும் மையமாக வரலாறும் காமமும் வாசனையின் சுகந்தமும் இரவும் இருக்கிறது

நன்றி

பனுவல்மணம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2021 23:18
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.