பொன்னி,கோதை – கடிதங்கள்

பொன்னியும் கோதையும்

அன்புள்ள ஜெ

உண்மையில் பொன்னியின்செல்வன் விளம்பரத்தைப் பார்த்தபோது நான் எலமஞ்சலி லங்காவைத்தான் நினைத்துக்கொண்டேன். அப்போது நீங்கள் எழுதுவது பொன்னியின்செல்வன் திரைக்கதை அல்லவா என்று ஒரு மின்னஞ்சல் போட்டிருந்தேன். நீங்கள் அதை புன்னகையுடன் தவிர்த்துவிட்டீர்கள். நான் ஊகித்துவிட்டேன் என்று பதில்போட்டேன். கூகிள் மேப்பிலேயே அந்த இடத்தையும் அடையாளம் கண்டு அனுப்பியிருந்தேன். 2013ல் நானே நண்பர்களுடன் அங்கே சென்று அதே இடத்தில் கோதாவரியில் நீராடினேன். அதையும் எழுதியிருந்தேன். அற்புதமான இடம் அழகான நினைவுகள். ஆனால் அதற்குள் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அதுதான் திகைப்பூட்டுவதாக இருக்கிறது. அன்று 11 வயதான என் மருமான் என்ன ஏது என்று கேட்டுக்கொண்டே இருப்பான். அவன் இன்றைக்கு வெண்முரசு வாசகன்.உங்களுக்கு கடிதமும் போட்டிருக்கிறான்

ஜி.சரவணன்

அன்புள்ள ஜெ

எலமஞ்சிலி லங்கா பற்றி நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். அங்கே கோதாவரிக்கரையில் அமர்ந்தபடி பானுமதி, கண்டசாலா பாடிய பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்ததையும் எழுதியிருந்தீர்கள். அந்தமுகில் இந்தமுகில் நாவலுக்கான கரு அங்கேதான் விழுந்திருக்கவேண்டுமென நினைக்கிறேன்

வி.அர்.சந்திரசேகர்

அன்புள்ள ஜெ

எலமஞ்சலி லங்கா புகைப்படங்களும் குறிப்பும் அழகாக இருந்தன. அன்று எனக்கு உங்களைத் தெரியாது. நான் இரண்டு ஆண்டுகளாகவே உங்கள் தளத்தை வாசிக்கிறேன். வாசிக்க வாசிக்க எனக்கிருக்கும் நிறைவோ கொந்தளிப்போ என்னவென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதுதான்.எத்தனை ஊர்கள். எத்தனை மனிதர்கள். மகிழ்ச்சியாக வாழவேண்டுமெனறால் மகிழ்ச்சி முக்கியம் என்று முடிவெடுக்கவேண்டுமென எழுதியிருக்கிறீர்கள். அதை நினைத்துக்கொண்டேன்

ராஜி மகாதேவன்

அன்புள்ள ஜெ,

கோதாவரியின் கரை எனக்கும் பிடித்தமான ஊர். என் அப்பாவின் பூர்விகம் அங்கேதான். இரண்டு வாசல் வைத்த அகலமான வீடுகள். தென்னந்தோப்பு. எங்கே பார்த்தாலும் மென்மையான வண்டல் மண். அழகான நதி. கண்கூசும் நீர்ப்பரப்பு. ஆந்திராவின் களஞ்சியம் அது. கோதாவரி பத்து காவேரிக்குச் சமமானது.

நீங்கள் பல இடங்களில் கோதாவரி பற்றி எழுதியிருக்கிறீர்கள். கோதைப்பித்து எனக்கும் உண்டு. உங்கள் படங்களைப் பார்க்கையில் உங்களுடனேயே இருந்துகொண்டிருக்கிறேன். மானசீகமாக நீங்கள் செல்லும் எல்லா பயணங்களிலும் இருக்கிறேன்.

சுகன்யா ராம்

ஓர் இடம்

கோதையின் தொட்டிலில்

கோதையிடமிருந்து பிரிந்து…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2021 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.