கவிதையின் ரகசியப் பாதை
அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் பில்லி காலின்ஸ்.(billy collins) Poet Laureate ஆகத் தேர்வு பெற்றவர், நியூயார்க்கில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்..

Questions about angels: poems 2) . Picnic, lightning. 3) Sailing alone around the room: new and selected poems. 4) Nine horses: poems 5) Trouble with poetry and other poems. 6) Ballistics: poems 7) Aimless love: new and selected poems. 8)Poetry 180: a turning back to poetry போன்ற கவிதை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

இவரது கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். கவிதையைப் பற்றி இவர் எழுதும் கவிதைகள் அபாரமானவை.
பேராசிரியராக வேலை செய்த நான் கவிதைகளும் எழுதினேன். இன்று நான் ஒரு கவிஞன் பேராசிரியராகவும் பணியாற்றுகிறேன் என்று தன்னைப் பற்றிக் காலின்ஸ் குறிப்பிடுகிறார். ஆசிரியர்களுக்காகப் பட்டறையில் கவிதையைப் புரிந்து கொள்வது எப்படி என்பது குறித்த இவரது உரை இணையத்தில் உள்ளது. மிகச்சிறந்த அறிமுகவுரையது.
பில்லி காலின்ஸ் கவிதைகள் தமிழின் நவீன கவிதைகளோடு மிகவும் நெருக்கமானது. குறிப்பாகத் தேவதச்சன் கவிதைகளுடன் இவரது கவிதைகளை இணைத்து வாசித்து பார்க்கிறேன். ஒரே உலகின் இரண்டு வேறு வெளிப்பாடுகள் என்றே தோன்றுகிறது. சமகால அமெரிக்கக் கவிதையுலகில்

ஒன்றிரண்டு அமெரிக்கக் கவிகளின் கவிதைகளே நம்மோடு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. மற்றவை சிறந்த கவிதைகளாக இருந்த போதும் அமெரிக்கத்தன்மை அதிகம் கொண்டிருக்கின்றன.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற பில்லி காலின்ஸ் பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் கவிதைகளை வாசிக்கும் காணொளிகளும் நிறைய உள்ளன. கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அத்தனை உற்சாகம். கேலியும் கிண்டலும் கலந்த வெளிப்பாடு. வேர்ட்ஸ்வொர்த் காலத்துக் கவிஞர்கள் கவிதையிலிருந்து காமத்தையும் நகைச்சுவை உணர்வையும் வெளியேற்றிவிட்டார்கள். அதற்குப் பதிலாக இயற்கையினையும் மிகை உணர்ச்சிகளையும் முதன்மைப்படுத்திவிட்டார்கள். நவீன கவிதை காமத்தையும் நகைச்சுவை உணர்வையும் மீட்டுக் கொண்டு விட்டது என்கிறார் பில்லி காலின்ஸ்.
அவரது உரையிலும் நேர்காணலிலும் கவிதை குறித்து வெளிப்பட்ட அவரது எண்ணங்கள் இவை

••
நாவலாசிரியர்கள் போலக் கவிஞர்களால் ஒருபோதும் தன் படைப்பிலிருந்து மாதிரி காட்ட முடியாது. உரைநடை எழுத்தாளர்களுக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் உண்டு. கவிஞர்களுக்கு இருப்பதெல்லாம் நான் மற்றும் நீ தான் அபூர்வமாக நாம் என்றும் சொல்கிறோம். ஆனால் இந்த நீயும் நானும் ஆயிரம் கதாபாத்திரங்களை விட வலுவானவர்கள். பல்வேறு காலங்களைத் தாண்டி வாழ்ந்து கொண்டேயிருப்பவர்கள். இந்த நீயும் நானும் யாரென முற்றாக வரையறை செய்ய முடியாது. அது கடவுளாகவும் இருக்கலாம். குட்டித் தவளையாகவும் இருக்கலாம்.
**
எவராலும் ஒரு கவிதையைத் துவங்கிவிட முடியும். அதைச் சரியாக முடித்து வைக்க ஒரு கவிஞனால் மட்டும் தான் முடியும். கவிஞன் கவிதையை முடிப்பதில்லை. அதிலிருந்து விலகிக் கொண்டுவிடுகிறான். உண்மையில் கவிதையின் முதல்வரி என்பது ஒரு பாதை. அதன் வழியே நீங்கள் நடந்து சென்றால் குறிப்பிட்ட இடத்தை, நிகழ்வை, அனுபவத்தை அடைவீர்கள். கவிதையின் இந்தப் பாதை விநோதமானது. சில நேரம் கவிஞன் கவிதையின் கடைசிவரியை முதலில் எழுதிவிடுவான். பின்பு அந்த வரியை நோக்கி மற்ற வரிகளைக் கொண்டு செல்லுவான். நவீன கவிதையில் முதல் வரியும் கடைசி வரியும் விநோதமானவை. கவிதையின் கடைசிவரியைச் சரியாக முடிப்பது எளிதானதில்லை. பல நேரங்களில் அந்த வரி உங்களை ஏமாற்றிவிடும். நீச்சல் குளத்திலுள்ள விசைப்பலகையைப் போல அந்தக் கடைசிவரி உங்களை எம்பி உயரே பறக்க வைக்க வேண்டும்.
**
துறைமுகம் நோக்கி வரும் கப்பல் போலக் கவிதை கடைசி வரியை நோக்கிச் செல்கிறது. கடலில் செல்லும் போது கப்பலுக்குக் குறிப்பிட்ட திசை நோக்கிப் பயணித்தாலும் அதன் மிதத்தல் நேர்கோட்டில் இருப்பதில்லை. கவிதையும் அப்படித்தான். கவிதையைக் கட்டிப்போட்டு உதைத்து நீ என்ன சொல்ல வருகிறாய் என்று உலகம் கேட்கிறது. அது ஒருவகை சித்ரவதை. கவிதை என்ன சொல்ல வருகிறது என்று கவிதையிடம் கேட்பது பெரிய வன்முறை.
**
அதிசயங்களை உலகம் கொண்டாடும் போது அதிசயங்களைத் தவறவிட்டதைக் கவிஞன் கொண்டாடுகிறான். அற்ப விஷயங்களை அதிசயமாகக் கொண்டாடுகிறான். கொஞ்சம் தாமதமாக உலகிற்கு வந்தவன் போலவே நடந்து கொள்கிறான். அது தான் அவனது இயல்பு. கவிதை என்பது தனியே குடிக்க வேண்டிய மது. உணவு தட்டில் வைக்கப்பட்ட பொறித்த மீனின் கண்கள் என்ன சொல்ல முயல்கிறது என்று கவிஞன் யோசிக்கிறான். கவலை கொள்கிறான். அதே நேரம் மீனின் ருசியையும் அவன் பாடுகிறான். உலகிற்கு இது முரணாகத் தோன்றலாம். ஆனால் கவிதை அப்படியானது தானே,
**
கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் கவிதைகள் தந்த உத்வேகம் தான் என்னைக் கவிஞனாக்கியது. அவரது கவிதைகளைப் போலவே நகலெடுத்துப் பார்த்திருக்கிறேன். இளம் ஓவியர்கள் மாஸ்டர்களை நகலெடுப்பது போலத் தான் நானும் நடந்து கொண்டேன். கவிஞர்கள் எளிதில் புகழ்பெற முடியாது. நல்லவேளை பிராஸ்ட் போலவே நானும் வாழும் போதே புகழ்பெற்றுவிட்டேன்
**
என் அம்மா கவிதைகளை விரும்பி வாசிக்கக்கூடியவர். அவருடைய உரையாடலில் நிறையக் கவிதைகள் இயல்பாக வெளிப்படும் அதனால் நான் சிறு வயதில் என் அம்மாவுக்கு இரண்டு விதமான பேச்சு இருப்பதைக் கண்டுபிடித்தேன். உண்மையில் வானொலியின் AM மற்றும் FM போன்ற வித்தியாசமான அலைவரிசையது இதில் FM என்பது கவிதைகளின் வழி பேசுவதாகும். கவிதைகளின் மீது சிறுவயது முதலே ஆர்வம் கொண்டிருந்தேன். அதை ஒரு விளையாட்டுப் பொம்மை போலப் பாவித்தேன் ஆனால் திடீரென அந்தப் பொம்மை என்னை விழுங்கிவிட்டது. கவிதை உங்களை விழுங்கிக் கொள்ளும் போது தான் நீங்கள் கவிஞராக மாறுகிறீர்கள்.
ஒரு எலி கையில் ஒலிம்பிக் தீபம் போலப் பந்தம் ஏந்திக் கொண்டு உரக்க முழக்கமிடுவதாகச் சொன்னால் உரைநடையில் சிரிப்பார்கள். கவிதையில் இதெல்லாம் எளிதாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிடும். யாரும் அது எலி என்று நினைக்கவே மாட்டார்கள். எலி யாரைக்குறிக்கிறது என வாசிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
**
கவிதை உருவாக நிறையக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அது உடனடியாகச் சமையல் போலச் செய்து முடிக்கப்பட முடியாது. சில கவிதைகளை எழுதி முடிக்க மாதக்கணக்கில் ஆகிவிடுகிறது. சில நேரம் முதல் இரண்டு வரி உருவாகிவிடும். மூன்றாவது வரியைத் தேடித் துப்பறிய வேண்டும். அது எளிதில் கிடைக்கவே கிடைக்காது. சில நேரம் முதல்வரியை ஒட்டுமொத்த கவிதையினையும் உருவாக்கிவிடும்.
**
கவிதை எழுதுவதும் புனைகதை எழுதுவதும் கிளாரினெட் மற்றும் பியானோ போன்ற இரண்டு வித்தியாசமான இசைக்கருவிகளை வாசிப்பதைப் போல மாறுபட்டது. இரண்டிலும் இசை பிறக்கிறது என்பதற்காக இன்றும் ஒன்று போன்ற இசைக்கருவிகள் இல்லையே. இரண்டின் வாசிப்பு முறையும் வேறு தானே, ஒரு சிறுகதையுடன் மூலம் ஒரு நபரின் வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியும். அவர் கதை வழியே தன் எதிர்காலத்தைத் திட்டமிட முடியும். ஆனால் கவிதையினை வாசிப்பதற்கு முன்பும் மௌனமேயிருக்கிறது. கவிதையை வாசித்தபிறகும் நிசப்தமே எஞ்சுகிறது. கதை எப்போதும் மற்றவர்களைப் பற்றியே பேசுகிறது. ஆனால் கவிதை கவிஞனைத் தான் முதன்மையாகப் பேசுகிறது. தனிநபர் நடிப்பு போன்றது கவிதை. நாடகம் போன்றது உரைநடை.
**
ஒரு மாதத்தில் மூன்று அல்லது நான்கு கவிதைகள் எழுதுவேன். அவ்வளவு தான் எனது கனிகள். நாவலாசிரியர்கள் போலப் புத்தகமாவது பற்றிக் கவிஞர்கள் கவலைப்படுவதில்லை. தனிக்கவிதைகள் மீது தான் அவர்களின் கவனமும் விருப்பமும் எப்போதுமிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு கவிதைத் தொகுப்பு வெளியானால் அதிர்ஷ்டம். சமகாலக் கவிதைத் தொகுப்புகளை விடவும் அனிமேஷன் படங்கள் என்னை அதிகம் பாதித்திருக்கின்றன. எழுதத் தூண்டுகின்றன. கார்டூன் படங்களின் ரசிகன் நான்.
**
பாடப்புத்தகங்களில் கவிதைகளுக்கு கீழே சில கேள்விகள் இடம்பெறுகின்றன. அதற்கு மதிப்பெண் உண்டு. அந்தக் கேள்விகளைக் கண்டதும் கவிதை பதறிப்போய்விடுகிறது. எதைச் சந்திக்கப் பயந்து அது கவிதையாக வெளிப்பட்டதோ, அதைக் கல்லூரிகள் கவிதையின் முன்னால் நிற்க வைத்துவிடுகிறார்கள். அந்தக் கேள்விகளே மாணவர்களுக்குக் கவிதையைப் பற்றிய தவறான புரிதலுக்கான துவக்க புள்ளி.
**
என் பார்வையில் கவிதை என்பது பாவமன்னிப்பு கேட்பதோ, நீதிமன்ற வாக்குமூலமோ, விசாரணை அறிக்கையோ இல்லை. அது ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வது. அழகான சிறு பொய்யை சொல்வது, சமூகத்தை நோக்கி கைகளை நீட்டி அன்பைத் தெரிவிப்பது. அல்லது தனிமையில் சிரித்துக் கொள்வது. வருத்தமடைவது போன்ற செயலே.
**
சில கவிதைகள்

Introduction to Poetry
BY BILLY COLLINS
I ask them to take a poem
and hold it up to the light
like a color slide
or press an ear against its hive.
I say drop a mouse into a poem
and watch him probe his way out,
or walk inside the poem’s room
and feel the walls for a light switch.
I want them to waterski
across the surface of a poem
waving at the author’s name on the shore.
But all they want to do
is tie the poem to a chair with rope
and torture a confession out of it.
They begin beating it with a hose
to find out what it really means.
•••
Silence
BY BILLY COLLINS
There is the sudden silence of the crowd
above a player not moving on the field,
and the silence of the orchid.
The silence of the falling vase
before it strikes the floor,
the silence of the belt when it is not striking the child.
The stillness of the cup and the water in it,
the silence of the moon
and the quiet of the day far from the roar of the sun.
The silence when I hold you to my chest,
the silence of the window above us,
and the silence when you rise and turn away.
And there is the silence of this morning
which I have broken with my pen,
a silence that had piled up all night
like snow falling in the darkness of the house—
the silence before I wrote a word
and the poorer silence now.
••
=
The Trouble with Poetry: A Poem of Explanation
Billy Collins
The trouble with poetry, I realized
as I walked along a beach one night —
cold Florida sand under my bare feet,
a show of stars in the sky —
the trouble with poetry is
that it encourages the writing of more poetry,
more guppies crowding the fish tank,
more baby rabbits
hopping out of their mothers into the dewy grass.
And how will it ever end?
unless the day finally arrives
when we have compared everything in the world
to everything else in the world,
and there is nothing left to do
but quietly close our notebooks
and sit with our hands folded on our desks.
Poetry fills me with joy
and I rise like a feather in the wind.
Poetry fills me with sorrow
and I sink like a chain flung from a bridge.
But mostly poetry fills me
with the urge to write poetry,
to sit in the dark and wait for a little flame
to appear at the tip of my pencil.
And along with that, the longing to steal,
to break into the poems of others
with a flashlight and a ski mask.
And what an unmerry band of thieves we are,
cut-purses, common shoplifters,
I thought to myself
as a cold wave swirled around my feet
and the lighthouse moved its megaphone over the sea,
which is an image I stole directly
from Lawrence Ferlinghetti —
to be perfectly honest for a moment —
the bicycling poet of San Francisco
whose little amusement park of a book
I carried in a side pocket of my uniform
up and down the treacherous halls of high school.
***
“Divorce,” by Billy Collins
Once, two spoons in bed,
now tined forks
across a granite table
and the knives they have hired.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
