மாடத்தி கடிதங்கள்-2

மாடத்தி – கடிதங்கள்

லீனா மணிமேகலையின் ’மாடத்தி’ – கடலூர் சீனு

அன்புள்ள ஜெ

மாடத்தி எனக்குப் பிடித்தமான சினிமாவாக அமைந்துவிட்டது. நான் அந்தப்படத்தை பயந்துகொண்டுதான் பார்த்தேன். ஏனென்றால் இதற்கு முன் என் கலைப்பட அனுபவங்கள் அப்படிப்பட்டவை. டுலெட் படம்கூட ஒரு கான்ஸெப்ட் ஆகத்தான் நன்றாக இருந்தது. காட்சிரீதியாக ஒன்றும் இல்லை. மாடத்தி நுட்பமான கூர்மையான காட்சியமைப்புகள் கொண்ட படம்.

அதை நான் பெண்ணியப்படமாகப் பார்க்கவில்லை. அதை ஒரு Coming of age படமாகவே என்னால் பார்க்க முடிந்தது. அப்படிப்பார்த்தாலும் எதுவும் குறையவில்லை. இளமைப்பருவத்தில் ஒருவன் ஒருமுறை உலகை வெல்லவேண்டியிருக்கிறது. அது தன்னைக் கண்டடைதலும்கூட. தன்னை வெல்லுவதும்தான். அதைக் காட்டும் படமாகவே அதைக் கண்டேன்.

மாடத்தி வழக்கமான திரில்லர், காதல், அரசியல் வகை படங்களை ரசிப்பவர்களுக்கான படம் அல்ல. இது ஒரு நல்ல இலக்கியச் சிறுகதை போன்ற படம். இதிலுள்ள அழகுகளை ரசிக்க கொஞ்சம் பொறுமையான, நல்லெண்ணம் கொண்ட பார்வை தேவை.

நானேகூட இந்தவகை படங்களின் ரசிகன் அல்ல. எனக்கு சென்ற இரண்டு ஆண்டில் வணிகப்படங்கள் திகட்டிவிட்டன. நாளுக்கு ஒரு சினிமா பார்த்தேன். நெட்சீரிஸ்கள் பார்த்தேன். சட்டென்று சலித்துவிட்டது. அந்தச் சலிப்புக்கு அற்புதமான மாற்றாக அமைந்தது இது.

எம்.ராஜேந்திரன்

அன்புள்ள ஜெ

மாடத்தி பார்த்தேன். அழகான சின்ன படம். அந்த படம் முடிந்தபின்னரும் பல காட்சிகள் மனதில் நின்றன. ஒரு நல்ல படத்துக்கான இலக்கணம் அதுதான் என நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக அந்தப் பெண்ணின் தோளில் கிளி அமர்ந்திருக்கும் ஒரு ஷாட். மதுரை மீனாட்சியின் உருவத்துடன் அந்த படம் அற்புதமாக இணைகிறது. படம் சொல்லாத பலவற்றை அந்தக் காட்சி உணர்த்துகிறது. கன்னியுடன் கிளி அமர்ந்திருப்பது நமது சிற்பங்களில் ஏராளமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கிளி அவளுடைய மழலை உள்ளம். தூய்மை. அவளுடைய கன்னித்தன்மை.பலவாறாக விரியும் நிறைய படக்காட்சிகள் கொண்ட அழகான படம். லீனா மணிமேகலை பாராட்டுக்குரியவர்

ஜெயக்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.