மண்ணில் உப்பானவர்கள் -உரையாடல்

மண்ணில் உப்பானவர்கள் நூல்

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா. நீண்ட நாட்களுக்குப் பின் எழுதுகிறேன். சமீபத்தில் சித்ரா பாலசுப்பிரமணியன் அவர்களின் “மண்ணில் உப்பானவர்கள்” நூலை முன் வைத்து ஒரு நிகழ்ச்சியை சித்ரா அவர்களோடு ஒருங்கிணைத்து இணையத்தில் நடத்தினேன். சித்ராவின் நூல் எளிய வாசகருக்கும் ஒரு மகத்தான சரித்திர நிகழ்வை அறிமுகம் செய்கிறது அதே சமயம் தேர்த்ந்த வாசகனிடத்திலும் ஒரு சலனத்தை விட்டுச் செல்லும்.

எப்போதும் காந்தி மார்டின் லூதர் கிங், மண்டேலாவுக்கு ‘inspiration’ என்று பொதுப்படையாகச் சொல்வது வழக்கம் ஆனால் எந்தளவு, ஏன் என்று அவ்வளவாகப் பேசப்பட்டதில்லை. காந்தி மிக இளமையில் (24/25 வயதில்) கறுப்பினத்தவர் பற்றி எழுதிய சில வரிகளை வைத்தே இந்று அவரை கட்டமைக்கும் முயற்சி நடக்கிறது. ஆனால் சம காலத்திலேயே ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் காந்தியையும், காந்திய பேரியக்கத்தையும் மிகக் கூர்ந்து கவனித்தும் விவாதித்தும் வந்திருக்கிறார்கள்.

1922- இல் காந்தி கைதான அடுத்த இரண்டாம் நாள் நியூ யார்க் சர்ச்சில் அவரை பற்றி பிரசங்கம் நடந்திருக்கிறது. அதே பாதிரியார், காந்தி கொல்லப்பட்ட இரண்டாம் நாள் அதே சர்ச்சில் ஒரு அஞ்சலிக் கூட்டம் நடத்தி அதில் பகவத் கீதை ஒரு அத்தியாயம் படிக்கப்படுகிறது. காந்தியை வெறுமனே தங்கள் போராட்டத்துக்கு உத்திகள் கற்பிப்பவராக மட்டுமல்லாமல் தங்கள் கிறிஸ்தவத்துக்கு புதிய புரிதல் அளிப்பவராகவும் பார்த்தார்கள். இவர்கள் காந்தியை மத மாற்றம் செய்ய முயன்ற சாதாரணர்களைப் போல் அல்லாது தாங்கள் நல்ல கிறிஸ்தவர்களாக இருக்க காந்தியிடம் பயின்றார்கள் எனலாம்.

அரவிந்தன் கண்ணையன்

மண்ணின் உப்பானவர்கள் காணொளி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2021 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.