அறஞ்செயவிரும்பு- கடிதம்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நலம். நலமே விழைக என்று பிராத்திக்கின்றேன். விக்கிப்பீடியா கடிதம் கண்டதும் படித்துவிட்டேன். இணைய பொது சுதந்திர கொள்கை பின்பற்றும் விக்கி தளத்தை கடந்த காலத்தில் அன்றாடம் பயண்படுத்தியுள்ளேன்.
பள்ளியில் பாடங்களை சரியாக படிக்காத காரணத்தாலும் பின் நாட்களில் படிக்கும் பழக்கம் வந்த காரணத்தாலும் தொடர்ந்து வாசித்து தகவல் சேர்த்துக்கொண்டே இருந்த காலம் அதிலும் குறிப்பாக வரலாறு மற்றும் வேலைக்காக தொழில்நூட்பம். அப்படி படித்து தமிழ் ஆர்வம் கொண்ட நண்பருடன் விவாதிக்கும் போது நாங்கள் விளையாட்டாக களித்த மத்திய பொழுதுகள் நினைவில் வந்து மகிழ்ச்சியூட்டிது.
நினைவில் ஓடிய விவாதம், ’அசோகர் காலத்தில் கூட தெற்கே அவனால் வரமுடியல ’என்று வெட்டிவிராப்பு பேசுகையிலே இருவரும் ஒரு சேர சொல்லிக்கொண்டோம் அவன் ஒரு வியுகத்தில பொறுமையா இருந்திருப்பான் தெற்க அடிக்கடி ஒருத்தன ஒருத்தன் அடிச்சிகிட்டு இருக்கான் அவனுக முடிக்கட்டும் அப்பறம் மிதம் இருப்பவர்களை நாம பார்த்துக்குவோம் என்று ஆனால் இன்று வரை இவர்கள் அடிச்சிகிட்டு முடிஞ்சபாடில்ல என்று… ;)
சேவை என்பதை கடந்து எதுவும் இலவசம் இல்லை என்பது என் எண்ணம் ஆகையால் தொடர்ந்து குறைந்த நன்கொடை பங்களிப்புகளை தந்துள்ளேன். பின் நாட்களில் புத்தகங்கள் வாசிப்பு தொடரவும் விக்கி குறைந்தது அதே போல் நன்கொடை பங்களிப்பும் நின்றது. விக்கி கடிதம் அந்த குற்ற உணர்ச்சியை தூண்டியது
அதற்கு மற்றொரு காரணம் அவர்கள் வடிவமைப்பை நாங்கள் அறம்செயவிரும்பு (ww. அறம்செயவிரும்பு.com) வில் பயண்படுத்துகின்றோம். இன்று இந்த கடிதத்தை எழுத அவசியப்பட்டது, படிக்க கிடைக்கும் தரவுகள், தமிழ் என்பதை கடந்து அந்த வடிவமைப்பு விக்கியின் முக்கிய பங்களிப்பு என்பதற்காக.
இதே போன்ற பொது வெளியில் பங்களிப்புகளை கோரும் பிற நிறுவனங்கள் தான் முகநூலும், சுட்டுரைகளும் ஆனால் விக்கியின் ஆக்கபூர்வமான முயற்சி பலவகையில் பயணுள்ளது. மதுரை திட்டம், குட்டன்பர்க் திட்டங்களுக்கு உதவக்கூடியது அவர்கள் செயல்பாடுகளை எளிமைப்படுத்தக்கூடியது.
பொது வெளியில் பலரின் பங்களிப்புகளால் தகவல் சேகரிக்க மற்றும் செறிவுட்ட அவசியப்படும் இடத்தில் அவர்களது இந்த விக்கி வடிவமைப்பு அவரவர் தேவைக்கு ஏற்ப பயண்படுத்திக்கொள்ளலாம். அறம்செயவிரும்பு வில் நாங்கள் பயண்படுத்துகிறோம் பொது வெளியில் பங்களிப்புகளை பெற்றுக்கொள்கிறோம், ஊக்குவிக்கின்றோம்,
அதே நேரத்தில் பொதுமான நேரம் எடுத்து மேற்பார்வை செய்தே பிரசுரிக்கின்றோம். தகவலின் தரம் குறையாமல் அதே சமயம் ஆத்திசூடிக்கான விவாத களமாக, அதாவது மிக பெரிய கனவாக, தொடர் விவாதங்கள் கலந்துரையாடல் வழியாக அந்த அந்த காலகட்டத்திற்கான, துறைக்கான ஆத்திசூடி செய்யுள் உருவாகிக்கொண்டே இருக்கும் ஒரு சுரங்கமாக இருக்க வேண்டும்.
அவ்வை ஆத்திசூடிக்கு பின் பாரதி ஆத்திசூடி, பாரதிதாசன் ஆத்திசூடி, அழ வள்ளியப்பா ஆத்திசூடி என்ற வரிசையில் இன்று காலத்திற்கு ஏற்ப உருவாகிக்கொண்டே இருத்தல் நலம்.
மிக குறைந்த அளவிலான தகவலோடு தரவுகளோடு ஆமை வேகத்தில் செயல்படுகின்றோம். ஆத்திசூடிக்கு இன்று கிடைக்கும் அநேக தரவுகளிலும் இருந்து அறம்செயவிரும்பு சற்று மேன்மையாக இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றோம். இதற்கு விவாதங்களை சாத்தியப்படுத்தியது ஒரு காரணம்,
கூறிப்பிட வேண்டிய சில, ‘இயல்வது கரவேல்/ தானமது விரும்பு’ சொல்லிய அவ்வை ஏன் ‘ஏற்பது இகழ்ச்சி’ என்கிறாள்? ‘ஓதுவது ஒழியேல்’ என்ற அவ்வை ஏன் ‘எண் எழுத்து இகழேல்’ என்றும் கூறிப்பிட வேண்டும். ‘நாடு ஒப்பன செய்/ தேசத்தோடு ஒட்டி வாழ்’ என்ற உரைத்த அவ்வை கூடி வாழ்வதற்கு ஊரைத்தான் சொல்கிறாள் ‘ஊருடன் கூடி வாழ்’ என்று. ஏன் பொழுதுகளில் வைகறைக்கு கவனம் ‘வைகறை துயில் எழு’ என்று?
குறிப்பாக பொது தமிழ் விக்கி என்பது அநேகம் மக்கள் கலந்துக்கொள்ளும் திரைப்படம், விளையாட்டு என்று இருக்கலாம் ஆனால் தமிழ், மொழி, வரலாறு என்று வந்தால் பற்றாலர்களை விட ஆர்வலர்களே அவசியம். அதை மேன்படுத்த, தமிழ் மன்றம் போல பள்ளி கல்லூரி பாடத்திட்டத்தில் மாணவர்களை கலந்துக்கொள்ள செய்ய வேண்டும் அவற்றை மேற்பார்வை செய்து மேன்பட்ட தகவல்களை பிரசுரிக்கலாம். எங்களுக்கு இதை சாத்தியபடுத்தியிருப்பதில் விக்கிக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். உங்கள் தளத்தில் இதை தெரியபடுத்துவதில் மகிழ்ச்சி.
இன்று தமிழ் விக்கியில் இருக்கும் சிக்கல் என்பதை கடந்து அவற்றை நாம் உள்வாங்கிக்கொள்ளும் முறை அவசியம் அவற்றின் சாத்தியங்களை கொண்டு பங்காற்ற இன்னும் இன்னும் ஆர்வலர்கள் களமிறங்க வேண்டும். நன்றி!
நாராயணன் மெய்யப்பன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

