அந்திக்கு எதற்கு செந்தூரம்?

மலையாள எழுத்தாளர் கே.சுரேந்திரனை நான் 1986ல் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் எங்கள் தொலைதொடர்புத்துறையில் ஊழியராக இருந்தவர். பின்னர் பணிவிலகி திரைக்கதையாசிரியராக புகழ்பெற்றார். அவருடைய தேவி, மாயா போன்ற பல நாவல்கள் சினிமாவாக ஆகி வெற்றி பெற்றன. உணர்ச்சிகரமான கதைகள் அவருடையவை. ஜானகிராமன் நாவல்கள் போல இலக்கியத்திற்கும் பொதுவாசிப்புக்கும் நடுவே நின்றிருப்பவை. பெரும்பாலும் பெண்களின் உலகு சார்ந்தவை. காதல்- காமம் இரண்டும் மையப்பேசுபொருளாக அமைந்தவை.

பிற்காலத்தில் குமாரன் ஆசானின் வாழ்க்கையைப் பற்றி எழுதிய மரணம் துர்ப்பலம், நாராயணகுருவின் வாழ்க்கையைப் பற்றி எழுதிய குரு ஆகிய இருநாவல்களும் இலக்கிய முக்கியத்துவம் கொண்டவை. கேரளத்தின் முக்கியமான பல விருதுகளைப் பெற்றவர்.1997ல் தன் 76 அவது வயதில் திருவனந்தபுரத்தில் மறைந்தார்.

 

 

 

 

 

 

1972ல் வெளிவந்த மாயா என்னும் சினிமா கே.சுரேந்திரனின் புகழ்பெற்ற நாவலை ஒட்டியது. மாயா தொடர்கதையாக வெளிவந்தது. தந்தை, காதலர்களின் உலகால் அலைக்கழியும் பெண்களின் உலகம். அன்று மிக விரும்பிப் படிக்கப்பட்டது.

சந்தியக்கு எந்தினு சிந்தூரம்?

சந்த்ரிகைக்கு எந்தினு வைடூரியம்?

காட்டாறினு எந்தினு பாதசரம்?

என் கண்மணிக்கு எந்தினு ஆபரணம்?

 

மாயிகமாகும் மந்தஸ்மிதத்தின்றே

மாற்றறியுந்நவர் உண்டோ?

தங்கமே நின் மேன் கண்டால் கொதிக்காத்த

தங்கமும் வைரமும் உண்டோ?

 

பூமியில் சொர்க்கத்தின் சித்ரம் வரைக்குந்நு

காமுகனாய வசந்தம்!

என்னே காவிய கந்தர்வனாக்குந்நு

சுந்தரி நின் ஃபாவ கந்தம்!

ஜெயச்சந்திரன்

தட்சிணாமூர்த்தி

ஸ்ரீகுமாரன் தம்பி

[தமிழில்]

அந்திக்கு எதற்கு செந்தூரம்?

சந்திரனுக்கு எதற்கு வைடூரியம்?

காட்டாற்றுக்கு எதற்கு கால்கொலுசு?

என் கண்மணிக்கு எதற்கு ஆபரணம்?

 

மாயம் நிறைந்த இப்புன்னகைக்கு

மாற்று ஆராய்ந்தவர்கள் உண்டா?

தங்கமே உன் மேன் கண்டால் விரும்பாத

தங்கமும் வைரமும் உண்டா?

 

பூமியில் சொர்க்கத்தின் சித்திரத்தை

வரைந்து காட்டுகிறது காதலனாகிய வசந்தம்!

என்னை காவிய கந்தர்வனாக்குகிறது

சுந்தரி உன் காதலின் சுகந்தம்!

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 19, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.