ஒளி- கடிதங்கள்

‘ஒளி’ ஒரு சூம் நாடகம்

அன்புள்ள ஜெ,

ஒளி நாடகம் பார்த்தேன். நீங்கள் சொன்னதுபோல இத்தகைய செயல்பாடுகள் வழியாகவே மீண்டாகவேண்டும். எங்கிருந்தாலும் நாம் நம்மை திரட்டி முன்வைத்தாகவேண்டும். ப.சிங்காரம்சொல்வதுபோல “மனதை இழக்காதது வரை நாம் எதையும் இழப்பதில்லை”

சிறந்த நாடகம். இச்சூழலில் வழக்கமாக ஒரு நகைச்சுவை நாடகத்தையே பலரும் நாடுவார்கள். ஆனால் இது சீரியஸான நாடகம். ஆனால் எப்படியோ இச்சூழலை அது காட்டுகிறது. பலவகையிலும் நம் அனைவருடைய ஏக்கத்தையும் எதிரொலிக்கிறது.

எதிர்மறையான மனநிலைகளில் இருந்து ஒளி நோக்கி திரும்புபவர்களின் கதை. தன்னை எரிபொருளாக்கி பற்றவைத்துவிட்டுச் செல்கிறான். அவன் தோற்கவே மாட்டான்.

எம்.ராஜேந்திரன்

 

அன்புள்ள ஜெ

ஒளி அருமையான நாடகம் 17 நிமிடங்கள்தான். சுருக்கமான வசனங்கள். ஆனால் கதையின் சுருள்கள் விரிவானவை. மற்ற நால்வரும் சோஷியலானவர்கள். பலவகை திறமைகள் கொண்டவர்கள். ஆனால் அவர்களை எழுப்ப ஒரு தன்னந்தனியன்தான் வரவேண்டியிருக்கிறது. அறிவுஜீவி, இசைக்கலைஞன், நடனக்கலைஞர், மலையேறுபவர் ஆகியவர்கள் தங்கள் எல்லைகளை மீறியவர்கள். எல்லைக்கு அப்பால் நின்றிருந்தவன் அவன். அத்தகையவர்கள்தான் மீட்புக்கு வழிகாட்டுகிறார்கள். அவர்கள் நால்வருமே சமரசம் செய்துகொண்டார்கள். அவன் ஒரு நாள்கூட அங்கிருக்கமாட்டேன் என்கிறான். அவனிடமிருந்தே ஒளி தொடங்குகிறது

ஐந்துபேருமே இயல்பாக, தயக்கங்கள் இல்லாமல் நடித்தனர். காமிராக் கோணங்கள் இல்லை. குளோஸப் இல்லை. ஆனால் உணர்வுகளை அருமையாகக் கடத்திவிட்டார்கள். சட்டென்று முடிந்ததுபோலிருந்தது. அருமையான நடிப்பு.

அர்விந்த்குமார்

 

அன்புள்ள ஜெ,

ஒளி இந்தச் சூழலுக்கு உகந்த நாடகம். நாடே சர்வாதிகாரம் நோக்கி செல்கிறது. பொய்யான ஒளி ஒன்று மேலே முன்வைக்கப்படுகிறது. ஒளி வேண்டுமென்றால் ஒரு தலைவனை வழிபடு என்கிறார்கள். அவன் அதிகாரத் தலைவன் அதற்கு நேர் எதிரானது கீழே நிகழ்கிறது. மெய்யான ஒளி. அதற்கு தன்னை தியாகத்தால் அளிக்கும் மெய்யான தலைவன், ஒரு மெய்யான வழிகாட்டி.

சிறப்பான நாடகம்

ஆர்.ராகவ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 30, 2021 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.